Select Your Favorite Topic! Enjoy Reading!!

Saturday, January 25, 2014

‘ ஊதாக்கலரு ரிப்பன் ’‘ A TECHNOLOGY TO RETAIN AND ATTRACT YOUTH TO AGRICULTURE’ – THE HINDU



இளைஞர் பக்கம் 
EXCLUSIVE PAGE FOR YOUTH

‘ ஊதாக்கலரு ரிப்பன் ’

‘A TECHNOLOGY TO RETAIN AND ATTRACT
YOUTH TO AGRICULTURE’ – THE HINDU

“ஏ டெக்னாலஜி டு ரீடெய்ன் அண்ட் அட்ராக்ட் யூத் டு 

அக்ரிகல்ச்சர்”

இளைஞர் பக்கம் 
EXCLUSIVE PAGE FOR YOUTH



கம்ப்யூட்டரும் மவுசும் கலப்பை கலப்பை பிடிக்க
தொடங்கிவிட்டன !


“யார்ர்ர்ர்ர்ரு இந்த பாண்டியன் ?
போடுவோம் அவருக்கு ஒரு சலாம்”

இந்திய விவசாயம் இளைஞர்களிடம் கைமாறுகிறது !

வலைப்பூ
நேயர்களுக்கு
வணக்கம் !

எப்படி இருக்கிங்க ? சவுக்கியமா ?

இந்த வாரத்தில் புதுசா களஞ்சியம் அப்படீன்னு ஒருதொடர் உங்களுக்காக அறிமுகம் செஞ்சிருக்கோம்.

அடுத்தவாரம் ‘சாமக்கோடாங்கி சங்கரலிங்கம்’ விவசாய கேள்வி பதில் நிகழ்ச்சி தொடங்கும்.

நேயர்கள் கேள்விகளைகேட்கும் வரை சங்கரலிங்கம் கேள்வி கேட்பார், சாமக்கோடாங்கி பதில்சொல்லுவார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 27 ம் தேதி நமது விவசாய பஞ்சாங்கத்தைத் தொடங்கினோம்.

நீங்கள் வீசும் வலைக்கு கிடைக்குமாறு இதுவரை ஏறத்தாழ 38 செய்திளை கடந்த 30 நாட்களில் தளம் இறக்கி உள்ளோம்.

900 முதல் 1000மில்லி மீட்டர்  மழை கிடைத்தும் வறட்சி நம்மை வாட்டி வதக்கு​ம் நிலை பற்றிய ஒருசெய்தி !

வெறும் 300 மில்லிமீட்டர் மழையை வைத்துக்கொண்டு உலகத்தில் விவசாய நாட்டாண்மை செய்யும் இஸ்ரேல் பற்றிய மயிர்கூச்செரியும் செய்தி !

ஆரம்ப காலத்தில் நாணயமாக முகம் காட்’டி இடைக்காலத்தில் வார்த்தை தவறிப்போன பருவமழை பற்றிய சோகக்கதை !

பதினான்காயிரம் மில்லிமீட்டர் ஆண்டுதோறும் பெறுவதற்காக உலக சாம்பியன் பட்டம் வென்றும் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க முடியாமல் ட்ரக்குகளில் தண்ணீர்கொண்டு செல்லும் சிரபுஞ்சியின் கண்ணீர்க்கதை !

இப்படியாக நவரசம் ததும்பும் செய்திகள் நமது வலைத்தளம் நிறைய்ய...நி றை ய தொடர்ந்து கிடைக்கும்.

இனறைக்கு முக்கியமாக ‘இந்து’ ஆங்கிலப் பத்திரிக்கையில் வந்த ஒருசெய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

இந்திய விவசாயம் இளைஞர்ளை கவர்ந்து இழுக்கிறது !

‘வந்தே தீரும்’ என்று எதிர்பார்த்த தருணம் வந்துவிட்டது !

விவசாயம் கைமாறுகிறது !

படித்த பாட அறிவு, படிக்காமல்  படித்த பட்டறிவு,  

கணினியும வலைத்தளமும் வாரிக் கொடுக்கும் உலக அறிவு,  

பாரம்பரியமாய் குரோமோசோமில் சேமித்த அறிவு – இப்படி ஏகப்பட்ட 

தளவாடங்களுடன் இந்திய இளைஞர்கள் விவசாயத்தில் 

குதிக்கிறார்கள்.


அரசு வே​லையாக இருந்தாலும் சரி ! தனியார் கமபெனியாலும் சரி ! அயல்நாட்டில் அசுரச்சம்பளம் !

எது எப்படி இருந்தாலும், சொந்த நிலத்தில் அந்த வியர்வையை 

சிந்தினால் அதைவிட பலமடங்கு பணம் பார்க்கலாம் என்று 

முடிவெடுக்கத் தொடங்கிவிட்டார்கள் இந்திய இளைஞர்கள்.

சமீபத்தில் ‘இந்து’ ஆங்கில இதழில் வந்தசெய்தி இதனை உறுதி செய்கிறது.
மரக்காணம் கிராமத்தில் எம் பி ஏ பட்டதாரி கார்த்திகேயன் சொல்லுகிறார்

“எந்த வேலை செய்தாலும் அதிகபட்சமாக மாதம் 50000 ரூபாய் என்று 

வருஷத்தில் 6 லட்சம் பார்க்கலாம்”



“ஆனால் எனக்கு சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தில் தர்ப்பூசணி 

போட்டு 12 லட்சம் சம்பாதிக்கிறேன்”



“அத்தோடு நான் டிரிப் இரிகேஷன்​ கம்பெனிஒன்றையும் தொடங்கி

இருக்கிறேன்” என்றகிறார் நம்பிக்கையுடன் இந்த மரக்காணம் பட்டதாரி
  

இளைஞர் கார்த்திகேயன்.



அதுமட்டுமல்ல, தனக்குசொந்தமான 93சென்ட் நிலத்தில் 70 நாட்களில்

தர்ப்பூசணி போட்டு நா ன் கு ல ட் ச த் து  ப தி னா ன் கா யி ர ம்

 ரூபாய் சம்பாதித்த ஒரு பஸ் கண்டக்டர் தன் வேலைக்கு டபிள் விசில்

 கொடுத்து விட்டார் !

“ ஏ டெக்னாலஜி டு ரீடெய்ன் அண்ட் அடராக்ட் யூத் டு அக்ரிகல்ச்சர்” 

என்ற தலைப்பில் ‘இந்து’ வில் பொங்கல் வாரத்தில் 

சக்கரைப்பொங்கலாக வந்த அற்புதமான செய்தியை எழுதி இருப்பவர் 

எம் ஜே பிரபு ! அவருக்கு ‘விப’ தனது பாராட்டுகளைப் பதிவுசெய்கிறது.

பட்டதாரி இளைஞர்ளையும் வளைத்துப்போடும் இந்த ‘வல்லிய’ தொழில்நுட்பங்ளைத் தந்தது ‘அயம்வாம்’ தமிழ்நாடு வேளாணமைப் பல்கலைக் கழக திட்டம் ! பாராட்டுக்கள் !

இந்தசெய்தி வரக் காரணமான அயம்வாம் திட்ட இயக்குநர் டாக்டர் பி 

ஜே பாண்டியன் அவர்களுக்கு ஒரு ‘ஓ’ போடலாம். ஆனால் அது 

கொஞ்சம் பழசு ! தூசு தட்டவேண்டும்.

அறுபது வயசுபெரிசுகள் கூட பலசெட்டில் முணுமுணுக்கும் பாட்டு

 ஊதாப்பூ ரிப்பன்’ தான் ரொம்பப் பிரபலம் !

“யார்ர்ர்ர்ர்ரு இந்த பாண்டியன் ?

போடுவோம் அவருக்கு ஒரு சலாம்”

என்று பாடத் தோன்றுகிறது.

வேறு என்ன ? விவசாயத்திற்கு இளைஞர்ளை வரவேற்போம் !

கணக்கு மட்டுமே போட்டு வந்த கம்ப்யூட்டரும் மவுசும் இன்று 

கலப்பை பிடிக்க வந்திவிட்டன !

இதைப் பார்க்கும் வலைப்பூநேயர்களே ! உங்கள் ஒவ்வொருவருக்கும்

 எனதுவேண்டுகோள் !

உங்கள் நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், உறவினர்கள், உடன் வேலைபார்ப்பவர்கள் எல்லொருக்கும் அறிமுகம் செய்யுங்கள் !



செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

எஃகதனிற் கூரிய தில் – திருக்குறள் – 759 பொருள்செயல்வகை)


எந்த எதிரியும் எழுந்திருக்க மாட்டான்

நீ அடித்த ஆயுதம் பணம் என்றால் – ச கோ ச

                        


1 comment:

  1. ஏதோ அங்கொன்றும்
    இங்கொன்றுமாய் பூக்கும்
    அபூர்வ புஷ்பங்கள்.
    நந்தவனமாவது ...
    எப்போதோ?

    ReplyDelete