Image Courtesy: Thanks Google |
- கோழிக் கழிவைக் கொண்டும் மண்புழு உரம் தயரிக்கலாம்
- பசும் சாணத்திற்கு பதிலாக மக்கிய கோழிக் கழிவை உபயோகிக்கலாம்.
- பொட்டாசியம் கால்சியம் மக்னீசியம் போன்ற நுண்;சத்துக்கள் இதில் உள்ளன.
- நைட்ரஜன், பாஸ்பரஸ், கால்சியம் ஆகியவை மற்ற இயற்கை எருக்களில் இருப்பதைவிட அதிகம் உள்ளது.
- மண்ணில் கரிம சத்தை அதிகரிக்கிறது.
- நீர் உறிஞ்சும் தன்மை மேம்படுகிறது.
- பிராணவாயுவைக் கூட்டுகிறது..
- உவர் மற்றும் களர் நிலங்களை சீர்திருத்துகிறது.
தேவைப்படுபவை
- மரத்தடியில் நிழல் உடைய ஒரு இடம் அல்லது ஒரு சிறு கொட்டகை
- 1000 முதல் 1500 மண்புழுக்கள், மக்கிய கோழி எரு
- போதுமான தண்ணீர்.
- பசுந்தழைகள, புற்கள் மற்றும் இலைச்சருகுகள்.
செயல் விளக்கம்
- மூன்றரை அடி அகலம் 10 அடி நீளமும் கொண்ட இடத்தில் புழுப்படுக்கை அமையுங்கள்.
- புழுப்படுக்கை என்பது மண்புழுக்களுக்கு உண்ணவும் உறங்கவுமான இடம்.
- மூன்றரை அடி அகலம் 10 அடி நீளத்திற்கு அரை அடி ஆழுத்திற்கு பள்ளம் எடுக்கவும்.
- அந்த அரை அடி ஆழமான பள்ளத்தில் 2 அங்குல உயரத்திற்கு மணலை பரப்புங்கள்.
- மணல் பரப்பின் மீது தேங்காய் உறி மட்டைகளை அதன் முதுகுப்புறம் கீழே இருக்குமாறு அடுக்கவும்.
- இப்படி அடுக்குவதற்கு 400 முதல் 500 உறிமட்டைகள் தேவைப்படும்.
- உறி மட்டைகளின் மீது 6 அங்குல உயரத்திற்கு மக்கிய கோழி உரத்தினை பரப்புங்கள்.
- அதன்மீது 2 அல்லது 3 குடம் தண்ணீர் தெளியுங்கள்.
- தண்ணீரை தெளித்தப் பின் சேகரித்து வைத்திருக்கும் பசுந்தழைகளை ஒரு அடி உயரத்திற்கு பரப்பவும்.
- இலை தழைகளைப் போடும்போது பெரிய கிளைகளைத் தவிர்க்க வேண்டும்.
- இலை தழை மற்றும் சருகுகளை பரப்பிய பின்னால் அதன்மீது சாணக் கரைசலை சோரத் தெளிக்க வேண்டும்.
- அதன்மீது மறுபடியும் 6 அங்குலம் மக்கிய கோழிக்கழிவை போடவும்.
- மீண்டும் 1 அடி பசுந்தழை மற்றும் சருகுகள் சாணக்கரைசல் தெளிப்பு என்று இரண்டாவது அடுக்கையும் போடவும்.
- இப்படியாக 2 அல்லது 3 அடுக்குகள் போட்டு போதுமான தண்ணீர் தெளிக்கவும்.
- சுமார் 3 அல்லது 4 அடி உயரம்வரை புழுப் படுக்கையை தயார் செய்த பின்னால் மண்புழுக்களை விடவும்.
- கடைசியாக புழுப்படுக்கையை ஈர சாக்கு கொண்டு மூடி வைக்கவும்.
- பின்னர் தினசரி புழுப்படுக்கையின் மீது போதுமான தண்ணீர் தெளிக்கவும்.
- ஐம்பது முதல் 60 நாட்களில் புழுப்படுக்கையில் இடப்பட்ட கழிவுகளை முழுமையான உரமாக மாற்றிவிடும்.
- பின்னர் தண்ணீர் தெளிப்பதை நிறுத்திவிட்டு புழுப்படுக்கையின் மேல்பகுதியில் இருக்கும் மண்புழு உரத்தை மட்டும் சேகரிக்கலாம்.
- மண்புழுக்கள் புழுப்படுக்கையின் அடிப்பகுதிக்குச் சென்றுவிடும்.
- இப்போது புழுப்படுக்கையில் கிட்டத்தட்ட 2 மடங்கு மண்புழுக்கள் அதிகரித்திருக்கும்.
- அதே புழுப்படுக்கையை பயன்படுத்தி மீண்டும் மீண்டும் மண்புழு உரம் தயாரிக்கலாம்.
கவனிக்க வேண்டியவை
• புழுப்படுக்கையில் ஈரம் இவ்லையென்றால் புழுக்கள் இறந்துவிடும்.
• ஈரம் அதிகம் இருந்தாலும் புழுக்கள் இறந்துவிடும்.
• புழுப்படுக்கையின் அடியில் போடப்பட்டிருக்கும் தேங்காய் உறி மட்டைகளும் மணலும் அதிகப்படியான நீரை உறிஞ்சிக் கொள்ளும்.
• புழுப்படுக்கைக்கு நிழல் அவசியம் வேண்டும்.
• அதிகப்படியான வெப்பத்தை புழுக்கள் தாங்காது.
• பாம்பு, பறவைகள,; எலி, எறும்புகள,; பிள்ளைப்பூச்சி போன்றவை மண்புழுவை உணவாகக் கொள்ளும்.
அவற்றிலிருந்து நாம் இவற்றை பாதுகாக்க வேண்டும்.
Image Compost: Thanks Google |
No comments:
Post a Comment