Select Your Favorite Topic! Enjoy Reading!!

Thursday, February 4, 2016

தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்கும் ஒரேவழி - கட்டுரை


தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்கும் ஒரேவழி
                                                                          கட்டுரை 
                                                                      
         மழைநீர் அறுவடை என்பது, பெய்யும் மழைநீரை, மண்ணில் ( அ) நிலத்தடியில்,  (அ ) மேல்நிலைத் தொட்டிகளில் சேமித்து, தேவையானபோது அதனை பயன்படுத்துவது என்று அர்த்தம்.

      ஆறுகள் குளங்கள் மற்றும் ஏரிகள் மூலம் மனித உபயோகத்திற்கு, உலகம் முழுவதும் கிடைக்கும் நீரின் அளவு ஒரே ஒரு சதம்   மட்டுமே.

      இந்தியாவில் நமது கைகளுக்கு கிடைக்காமல் ஓடிப்போகும் உபயோகப் படாத நீர் 85  சதவிகிதம்.

      ஒருவேளை கிடைத்தாலும், கிடைக்கும் என்ற நிலையில் பூமிக்கடியில் நமக்காக காத்திருக்கும் நீர் 7 சதவிகிதம்.

      சூரியனின் சுடுகதிரால் ஆவியாக பறந்து போவது 5 சதவிகிதம்.  நமக்கு உபயோகம் ஆவது 3 சதவிகிதம்.

      சாதாரண ஒரு வீட்டின் கூரையில் அறுவடை செய்யும் நீர் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் ஒரு ஆண்டுத்தேவையை சரிகட்டும்.

      குறைவான செலவில் தமது தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்கும் ஒரேவழி மழைநீர் அறுவடை மட்டும்தான்.

      இந்தியாவின் 6 லட்சம் கிராமங்களில், இன்னும்கூட 70 சதவிகித  மக்கள் வசிப்பது கிராமங்களில்தான்.

      கலங்கல் தன்மை,   நிறம், மற்றும் நுண்ணுயிரையும், மணல் வடிகட்டி, வடிகட்டிவிடும்.

      இப்படி அறுவடை செய்த நீருடன் குளோரின் மாத்திரைகளை போட்டு சுத்தம் செய்யலாம். இந்த தண்ணீர் பாதுகாப்பானது. இதனை குடிக்கவம், சமைக்கவும் பயன்படுத்தலாம்.
   
கூரை நீர் அறுவடை

      சில நாடுகளில் மழை பன்னிரண்டு மாதங்களும் பரவலாக பெய்யும், ஆனால் நம் நாட்டில் கிட்டத்தட்ட 70 சதவிகித மழை நான்கு மாதங்களில் பெய்துவிட்டு ஓய்வெடுத்துக் கொள்கிறது.

      மர இலைகளும், பறவைகள் எச்சமும், மழை அறுவடை செய்யும் கட்டிடங்களிpன் கூரைகளை அசுத்தம் செய்துவிடும். அதனால் மழைக் காலங்களில் இந்தக் கூரைகளை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். கூரையிலிருந்து தண்ணீர் எடுத்துச் செல்லும் குழாய்களில் மைக்ரான் அல்லது 10 எம்.எம். முதல் 10 எம்.எம். வரையான கம்பிவலைகளைப் பொருத்தலாம். இது தண்ணீருடன் செல்லும் தூசு துரும்புகளை தடுத்து நிறுத்தும்.

      முதன் முதலாகப் பெய்யும் மழைநீரை 10 நிமிடங்களுக்கு சேமிக்காமல் விட்டுவிடலாம். இந்த 10 நிமிட மழை கூரையை நன்கு கழுவி சுத்தப்படுத்திவிடும். அதன்பின்னர் சேகரமாகும் நீர் சுத்தமாக இருக்கும்.

      இப்படி கூரைநீரை சேகரித்து, அதனை வடிகட்ட வேண்டும். இதற்கு ‘ ரெடிமேட் ஆக மணல் வடிகட்டிகளை  சில கம்பெனிகள் விற்பனை செய்கின்றன.

      இவற்றை நாமே தயாரிக்கலாம். ஒரு சிறிய பெட்டி அல்லது தொட்டியை வடிகட்டியாக பயன்படுத்தலாம். இதில் அடிப்பகுதியில்      5 முதல் 25 செ.மீ. உயரத்திற்கு பெரிய ஜல்லி கற்களை போட வேண்டும். அதற்கு மேல் 5 முதல் 10 செ.மீ. உயரத்திற்கு சிறு ஜல்லிக்  கற்களை நிரப்ப வேண்டும். அதற்கும் மேல் 10 மி.மீ. உயரத்திற்கு மணலை நிரப்ப வேண்டும். இதுதான் மணல் வடிகட்டி. இதை நாமே கூட தயாரிக்கலாம்.

      இறுதியாக மணல் போட்டு நிரப்பிய குழியை. ஒரு பாலித்தீன் தாளைப் போட்டு மூட வேண்டும். அதன்மீது மண்ணைப் பரப்ப வேண்டும். மழைநீர் இறங்குவதற்கேற்ப அந்த பிளாஸ்டிக் தாளில், ஓட்டைகள் செய்து வைக்க வேண்டும்.

      மழைக் காலத்தில் பெய்யும் மழைநீர் நீர் உறிஞ்சு குழியில் இறங்கும் பின்னர் அடிப்பகுதி குழாய்மூலம், கிணற்றில் வடியும். நீர் உறிஞ்சுக் குழியில்  பொருத்தப்பட்டுள்ள குழாயின் நுனியில் கம்பிவலைச் சல்லடையைப் பொருத்த வேண்டும். இதனால் நீர் உறிஞ்சுக் குழியி லிருந்து மணலோ மண்ணோ கிணற்றுக்குள் போகாது.

      150 சதுர மீட்டர் அளவுள்ள வீட்டுக் கூரைமூலம் எவ்வளவு      நீரை அறுவடை செய்யலாம்?

      தமிழ்நாட்டில் மிகக்குறைவாக மழைபெறும் மாவடடம் தூத்துக்குடி. ஆண்டுசராசரி மழை அங்கு கிடைப்பது 655.7 மி.மீ.      656 மி.மீ. என்று வைத்துக் கொள்ளலாம். எவ்வளவு நீரை அறுவடை செய்யலாம் என்று பார்க்கலாம்.

      கூரை பரப்பளவு 150 சதுர மீட்டர். ஆண்டு சராசரி மழை 656 மி.மீ.  அல்லது   0.656 மீ. ஆக அறுவடை ஆகும் மொத்த நீரின்அளவை  கண்டுபிடிக்க             கூரை பரப்பளவை     கிடைக்கும்மழைஅளவால் பெருக்க வேண்டும்.  அதனை  1000 லிட்டரால் பெருக்கவேண்டும் . ஏனென்றால் ஒரு கனமீட்டரில் 1000 லிட்டர் தண்ணீர் பிடிக்கும். ஆக 150 சதுர மீட்டர்  பரப்பளவு
கொண்ட  கூரையின்  மூலம் மொத்தம்  98400 லிட்டர்  அறுவடை செய்ய முடியும்.

      ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு குடிக்கவும் சமைக்கவும் தேவைப்படும் நீரின் லிட்டர் அளவு 10 லிட்டர்.

      ஆறுபேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆண்டிற்குத் தேவைப்புடும் நீரின் அளவு எவ்வளவு என்று பார்க்கலாம்.

      ஆறு பேறுக்குத் தேவைப்படும் நீர் 60 லிட்டர்.  ஓராண்டுக்குத் தேவைப்படும் நீர் 21,900 லிட்டர் மட்டுமே. ஆனால் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 98,400 லிட்டர்.   


No comments:

Post a Comment