Select Your Favorite Topic! Enjoy Reading!!

Monday, May 30, 2016

22. பஞ்சகவ்யம் & அமுதக்கரைசல் (PANCHAKAVYAM & AMUTHAKKARAISAL)

Image Courtesy: Thanks Google


  • பஞ்சகவ்யம் ஒரு இயற்கை உரம்.
  • பசுவின் சாணம், கோமியம், பால், தயிர், நெய், ஆகிய ஐந்து பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவது.
  • உரமாகவும், பூச்சிக் கொல்லி மற்றும் பூசணக் கொல்லியாகவும், பயன்படுகிறது.
  • மண்ணிண் பௌதீக தன்மையை மேம்படுத்தி, நுண்ணுயிர் பெருக்கத்திற்கு உதவுகிறது.
  • இதை காசு கொடுத்து வாங்க  வேண்டாம். நாமே தயாரித்துக் கொள்ளலாம்.
  • பசுவின் சாணம் - 7 கிலோ
  • பசுவின் கோமியம் - 10 லிட்டர் 
  • பசு நெய்      -1 கிலோ 
  • பசும்பால் - 3 லிட்டர் 
  • பசுவின் தயிர் - 2 லிட்டர் 
  • தண்ணீர்        -10 லிட்டர் 
  • இளநீர் - 2 லிட்டர் 
  • வெல்லம் -3 கிலோ 
  • நன்கு கனிந்த பூவன் வாழைப்பழம்  - 12 
  • அகன்ற வாய் உள்ள பிளாஸ்டிக் (அ) மண் பாத்திரம் - 1 
  • பாத்திரத்தின் வாயை கட்டி மூடுவதற்கான துணி – 1 
  • பஞ்சகவ்யத்தை கலக்குவதற்கான கொம்பு (அ) குச்சி – 1

செயல்;முறை விளக்கம்.

  • பசும் சாணம் 7 கிலோவுடன் 1 கிலோ பசுநெய்யை ஊற்றி நன்கு பிசையவும்.
  • சாணம் நெய் கலவையை, அந்த பாத்திரத்தில் இட்டு, துணியினால் அதன் வாயினை கட்டி, 3 நாட்களுக்கு வைத்திருக்கவும்.
  • பாத்திரத்தை ஒரு நிழலான இடத்தில் வைக்கவும.;
  • அந்த பாத்திரத்தில், 4 வது நாள், 10 லிட்டர் கோமியம், 10 லிட்டர் தண்ணீர், ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கரைக்கவும்.
  • பாத்திரத்தின் வாயினை துணியினால், வேடு கட்டி மூடவும்.
  • இந்த கலவையை 15 நாட்களுக்கு வைத்திருக்கவும்
  • ஓவ்வொரு நாளும். காலை (அ) மாலை வேளையில், ஒரு குச்சியைக் கொண்டு நன்கு கலக்கிவிட வேண்டும்.
  • பதினாறாவது நாள், பசுவின் பால் 3 லிட்டர், பசுவின் தயிர் 2 லிட்டர், இளநீர் 3 லிட்டர், வெல்லம் 3 கிலோ, கனிந்த பூவன் வாழைப் பழங்கள் 12, ஆகியவற்றை இந்த கலவையுடன் சேர்த்து, நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
  • மீண்டும் பாத்திரத்தை மூடி, நிழலில் 30 நாட்கள் வைத்திருக்கவும்.
  • ஒவ்வொரு நகளும் மறவாமல், கலவையை, நன்றாக கலக்கிவிட வேண்டும்.
  • முப்பத்தி ஒன்றாவது நாள், பஞ்சகவ்யம் தயாராகிவிடும்.
பயன்படுத்தும் விதம்
  • பெருந்துளிகளாக வீழ்வதற்கேற்ப, கைத்தெளிப்பானில் தெளி முனையை மாற்றிக் கொள்ளவும்.
  • ஒரு எக்டேர் பரப்பிற்கு, 50 லிட்டர் பஞ்சகவ்யா கரைசலை, பாசன நீரில் கலந்து பாய்ச்சலாம்;.
  • நடவு செய்யும் பயிர் நாற்றுக்களை, 3 சத பஞ்ச கவ்யம் கரைசலில் நனைத்து நடவு செய்யலாம்.
  • இஞ்சி, மஞ்சள், போன்றவற்றின் விதைக் கிழங்குகளையும், பஞ்ச கவ்யம் கரைசலில், நேர்த்தி செய்து, நடவு செய்யலாம்.
  • கரும்பு விதைக் கரணைகளை, 3 சத பஞ்ச கவ்யா கரைசலில், 30 நிமிடம் ஊற வைத்து நடவு செய்யலாம்.
  • சேமிக்கும் விதைகளை 3 சத பஞ்ச கவ்யா கரைசலில், நனைத்து,       உலர வைத்து, பாதுகாக்கலாம்.
  • பஞ்சகவ்யம் 3 சத கரைசல் தயார் செய்ய 300 மிலியை, 10 லிட்டர் நீருடன் கரைத்துக் கொள்ளவும்.

அமுதக்கரைசல்

  • மிகவும் சுலபமாக தயாரிக்கக் கூடிய இயற்கை உரம்.
  • பசும் சாணம், பசும் கோமியம், பயறு மாவு, வெல்லம் ஆகியவை இருந்தால் போதும்.
  • முக்கியமாக மண்ணில் நுண்ணுயிர்களைப் பெருக்கி பயிர் மகசூலை அதிகரிக்கும் திரவ உரம். 
  • 20 லிட்டர் அமுதக்கரைசல் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.


தேவைப்படும் பொருட்கள்

  • 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட பாத்திரம் -  1
  •  புதிய சாணம் - 2 கிலோ  
  • பசுவின் கோமியம் - 2 லிட்டர்  
  • கருப்பட்டி அல்லது வெல்லம் - 200 கிராம்,;, 
  • பயறு மாவு - 200 கிராம் 
  • தண்ணீர் - 20 லிட்டர்.

செயல்முறை விளக்கம்

  • 20 லிட்டர் தண்ணீரில் சாணம், கோமியம், பயறு மாவு, வெல்லம்,  அனைத்தையும் கரைக்கவும்.
  • மண் பாண்டம் அல்லது பிளாஸ்டிக் பாத்திரத்தில் இந்த கரைசலை தயாரிக்கவும்.
  • பாத்திரத்தின்; வாயினை ஒரு துணியினால் வேடுகட்டி மூடவும்.
  • பாத்திரத்தை நிழலான இடத்தில் 48 மணி நேரம் வைத்திருக்கவும்.
  • காலையும் மாலையும் ஒரு குச்சியினால் நன்கு கலக்கவும்.
  • மூன்றாவது நாள் அமுதக்கரைசல் தயார்.
  • இதனை ஒரு லிட்டர் அமுதக் கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து பயிர்களின் வேர்ப்பகுதியில் ஊற்றவும்.
  • அல்லது பாசன நீரில் கலந்து விடலாம்.
  • தொடர்ந்து அமுதக் கரைசலை வேர்ப் பகுதி மண்ணில் ஊற்றுவதால் அதனை வளமானதாக மாற்ற முடியும்.

Image Courtesy; Thanks Google

21. பொக்காஷி கம்ப்போஸ்ட் தயாரிக்கும் முறை (POKASHI COMPOST PREPARATION)

போக்காஷி கம்போஸ்ட் 



Image Courtesy: Thanks Google
  • நெல்உமி, மீன் தூள், மற்றும் புண்ணாக்குடன் இ.எம் சேர்த்து    தயாரிக்கும் உரத்தின் பெயர் “ பொக்காஷி கம்ப்போஸ்ட் “ 
  • இதனை 4 நாட்களில் தயாரித்து விடலாம்.
  • காற்றோட்டமான நிலையில் (யுநசழடிiஉ ஊழனெவைழைn )    
தயாரிக்கப்படும் முறை இது.
  • தேவைப்படும்  பொருட்கள்.
  • நெல் உமி   100 கிலோ.
  • புண்ணாக்கு        25 கிலோ.
  • மீன் தூள்         25 கிலோ.
  • இ.எம்.           150 மில்லி.
  • ரசாயனம் சேர்க்காத வெல்லம்  150 கிராம்.
  • குளோரின் சேர்க்காத தண்ணீர்   15 லிட்டர்.
செயல்முறை
  • நெல் உமி, புண்ணாக்கு, மீன் தூள், வெல்லம் ஆகியவற்றை நன்றாக கலக்குங்கள்.
  • பின்னர் இ.எம். 150 மில்லி'ஐ அத்துடன் கலக்குங்கள்.
  • அடுத்து 15 லிட்டர் தண்ணீரையும், இ.எம். இரண்டாம்நிலை        கரைசலையும் ஊற்றி சீராக சேர்க்கவும்.
  • இந்தக் கலவையை நிழல் உடைய சிமெண்ட் தரையில் குவித்து    வைத்து ஈரச்சாக்கினால் மூடி வையுங்கள்.
  • சரியாக இது 4–வது நாள் கம்ப்போஸ்ட் உரமாக மாறிவிடும்.
  • கண் இமைக்கும் கால அளவில் (4 நாள்) தயாரிப்பதுதான் பொக்காஷி கம்ப்போஸ்ட்.
  • பொக்காஷி கம்ப்போஸ்ட் தயாரான பிறகு 14 -ஆம் நாள் இதனை    இடலாம்.
பொக்காஷி கம்ப்போஸ்ட் இடும் முறை.
  • இந்த கம்ப்போஸ்ட்  பொம்மை செய்யும் களிமண் பதத்தில் இருக்க வேண்டும்.
  • இதனை 1 ஏக்கருக்கு 100 கிலோ இட வேண்டும்.
  • சிறிய செடிகளுக்கு 0.5  கிலோ முதல் 2 கிலோ வரை இடலாம்.
  • பழ மரங்களுக்கு வயதுக்கு ஏற்ப 5 முதல் 10 கிலோ வரை இடலாம்.
  • இதற்கு பிரகாசமான  எதிர்காலம் உண்டு 
  • நம் நாட்டில் இப்போதுதான் இ.எம். பிரபலம் ஆகிவருகிறது.
  • பல துறைகளில் பயன்படுத்த ஏற்ற இ.எம். ஐ பயன்படுத்தினால் நமக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது.
  • விவசாயிகளுக்கும்  பேருதவியாக இருக்கும்.
பொக்காஷி கம்போஸ்ட் தயாரிப்பு 

 Image Courtesy: Thanks Google

20. தென்னை நார்க்கழிவு அல்லது ஆலைக்கழிவை உரமாக மாற்றும் முறை (COMPOSTING COIR WASTE & PRESSMUD)

தென்னை நார் கழிவு உரம்
Image Courtesy: Thanks Google
  • நீளம் 10 அடி, 3.5 அடி அகலமுள்ள பாத்தியினை நிழலான இடத்தில் அமையுங்கள்.
  • மரத்தடி நிழலில் இதைச் செய்யலாம்.
  • பாத்தியில் அரை அடி உயரத்திற்கு தென்னை நார்க்கழிவு    அல்லது ஆலைக்கழிவை பரப்பவும்.
  • கழிவுகள் நன்கு நனையுமாறு இரண்டாம் நிலை இ.எம். கரைசலை வாசல் தெளிப்பது மாதிரி, தெளிக்கவும்.
  • இப்படி 5 அல்லது 6 அடுக்கு, கழிவுகளை மீண்டும் மீண்டும் பரப்புங்கள்.
  • ஓவ்வொரு அடுக்கின் மேலும் இ.எம். இரண்டாம் நிலை கரைசலை     தெளியுங்கள்.
  • கடைசியாக இந்த குவியலின் மீது, சாக்கு, தென்னை மட்டை, பனை மட்டை போன்றவற்றை போட்டு மூடவும்.
  • கழிவுக் குவியலில் ஈரம் தொடர்ந்து இருக்க வேண்டும்.;
  • 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் தெளித்து வரவும்.
  • கழிவினை கையில் எடுத்துப் பிழிந்தால், விரல் இடுக்குகளில் தண்ணீர் வடிய வேண்டும்.
  • இ.எம். கரைசலை பயன் படுத்தும் போது, யூரியா மற்றும் புளுரோட்டஸ் காளான் விதை தேவை இல்லை.
  • தென்னை நார்க்கழிவு அல்லது ஆலைக் கழிவுடன் கால் பங்கு ஆட்டெரு அல்லது மாட்டெருவை  கலந்து கொள்ளவும்.
  • கழிவு 750 கிலோவுடன் 250 கிலோ ஆட்டெரு அல்லது மாட்டெருவை  கலந்துக் கொள்ள வேண்டும்.
  • இது ஒரு வாரத்திற்குள் உரமாக மாறிவிடும்.
  • யூரியா மற்றும் புளுரோட்டஸ் காளான் உபயோகப் படுத்தும்போது     உரமாக மாற குறைந்த பட்சம் 60 நாட்களாவது ஆகும்.
இ.எம். தாய் திரவத்தை பெருக்குவது எப்படி?
  • இ.எம். தாய் திரவத்தை பெருக்கினால், செலவு குறையும்.
  • இதற்கு 1 லிட்டர் தாய் திரவம் தேவை.
  • இத்துடன் 100 லிட்டர் தண்ணீர் மற்றும் 5 கிலோ வெல்லத்தையும்     சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும்.
  • இத்துடன் சேர்க்கும் வெல்லம்  சுக்ரோஸ், சந்தனம் அல்லது வேறு ரசாயனம் சேராததாக இருக்க வேண்டும்.
  • இப்படி கூடுதலாக பெருக்கிய தாய் திரவத்தை 30 நாட்களுக்குள் காலி செய்துவிடவேண்டும்
27. இ.எம். இரண்டாம் நிலை திரவம் தயாரிக்கும் முறை
  •  ஒரு லிட்டர் இ.எம். தாய் திரவத்தை  எடுத்துக் கொள்ளுங்கள்.
  • ரசாயனம் சேர்க்கப்படாத ஒரு கிலோ வெல்லத்தை, பொடி செய்யுங்கள்.
  • வெல்லப் பொடியை ஒரு லிட்டர் தண்ணீரில் கட்டி முட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளுங்கள்.
  • வெல்லக் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீரை கலக்குங்கள்.
  • தண்ணீர் குளோரின் இல்லாததாக இருக்க வேண்டும்.
  • இ.எம். தாய் திரவம் 1 லிட்டர் –ஐ ஊற்றி கலக்குங்கள்.
  • இதற்கு சுத்தமான பிளாஸ்டிக் பாத்திரம் வேண்டும்.
  • பிளாஸ்டிக் பாத்திரத்தை காற்றுப் புகாமல் மூடி வைக்கவும்.
  • இதனை நிழலான இடத்தில் ஒரு வாரம் வைத்திருக்கவும்.
  • ஓவ்வொரு நாளும் மூடியை திறந்து வைத்து, வெளியேறும் வாயுவை அனுமதிக்க வேண்டும்.
  • இல்லையென்றால் அந்த பிளாஸ்டிக் பாத்திரம் வெடித்து விடும் வாய்ப்பு உண்டு.
  • இனிப்பும் புளிப்பும் கலந்த வாசனையுடன் இரண்டாம் நிலை இ.எம்.     கரைசல்  ஒரு வாரம் முடிவில் தயாராகிவிடும்.
  • தயாரான இரண்டாம் நிலை இ.எம். கரைசலின் மீது வெண்மையான நுரை மூடியிருக்கும்.
இ எம் 
Image Courtesy: Thanks Google

19. வேம் மற்றும் இ.எம் உயிர் உரங்கள் - (Vesicular Arbuscular Mycorrhizha & Effective Micro Organism)

வேம் - வேர் உட்பூசணம் 
(Image Courtesy: Thanks Google))
வேம் - வெஸிக்குலர் அர்பஸ்குலர் மைக்கொரைசா 
  • தாவரங்களின் வேர்ப் பகுதியில் உண்டு உறங்கி உருப்படியான காரியங்களை ஆற்றுகிறது.
  • வேம்(VAM) என்பது இதன் சுருக்கமான பெயர்.
  • வெஸிக்குலர் அர்பஸ்குலர் மைக்கொரைசா (VESICULAR ARBUSCULAR MYCORHIZA)
  • தாவரங்களின் வேர்களுக்கும் மண்ணிற்குமிடையே பாலமாக பணி செய்கிறது.
  • பயிர்சத்துக்களை எடுத்துக் கொள்ள உதவியாக இருக்கிறது.
  • மணிச்சத்து தரக்கூடிய – பாஸ்பரஸ் என்னும்; கந்தக சத்தை எடுத்துக் கொள்ள உதவுகிறது.
  • பாஸ்பரஸ் சத்து குறைவாக உள்ள நிலங்களில் பசுமைப் பொருட்களை  ( BIOMASS )   மேம்படுத்த உதவுகிறது.
  • மண்ணின் கட்டமைப்பை  மேம்படுத்த  “  வேம் “ உதவுகிறது.
  • வேர்களைத் தாக்கும்  பூசண நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.
  • நூற்புழுக்களின் தாக்குதலைக் குறைக்கிறது.
  • வேர்த் தூவிகளின் எண்ணிக்கையைக் கூட்டுகிறதுஇ 
  • வேர்ப் பரப்பினை அதிகரிக்கிறது.
  • வறட்சியைத் தாங்கும் சக்தியை அளிக்கிறது.   
  • இவை அடுத்தடுத்த பயிர்களுக்கும் தொடர்ந்து கிடைக்கும்.
  • நெல் போன்றஇ தேங்கி நிற்கும் தண்ணீரில் வளரும் பயிர்களுக்கு இது உதவாது.
  • இரும்பு மற்றும் துத்தநாக சத்துக்களையும் இது பயிர்களுக்கு எடுத்துத் தருகிறது. 
இ.எம். வீரிய நுண்ணுயிர் கூட்டுரம் (EFFECTIVE MICRO ORGANISM)
  • வீரிய நுண்ணுயிர் கூட்டுரம் 
  • நுண்ணுயிர்களின் சகல கலா வல்லவன்.
  • நமக்கு அறிமுகம் ஆன மற்றும் அறிமுகம் ஆகாத –நுண்ணுயிர்களின் கூட்டு இது.
  • விவசாயம் கால்நடை வளர்ப்பு மீன் வளர்ப்பு கழிவுநீர்க் குழாய்களை சுத்தம் செய்ய குப்பைக் கூலங்களை விரைவாக     மக்க வைக்க இது ஒரு வரப்பிரசாதம்.
  • இஃபெக்டிவ் மைக்ரோ ஆர்கானிசம்(EFFECTIVE MICRO ORGANISM )    இதன் ஆங்கிலப் பெயர்.
  • இதனை ஒரு முறை காசு கொடுத்து வாங்கினால் போதும்.
  • நாமே பெருக்கிக் கொள்ள முடியும்.
  • மிகக் குறைவான செலவில் மண்வளத்தைக் கூட்டி விவசாயத்தை   லாபகரமாக மாற்றும்.
  • சுற்றுச்சூழலுக்கும்  பருவ நிலை மாறுபாட்டுக்கும்     பாதுகாப்பானது.



இ.எம். தரும் பயன்கள்

  • விதை நேர்த்தி முளைப்புத் திறனை கூட்டும்.
  • தொடர்ந்து 3 ஆண்டுகள் நிலத்தில் இட்டால் மண்கண்டம் பொன்கண்டமாக மாறும்.
  • தீமை செய்யும் நுண்ணுயிர்களை மண்ணிலிருந்து விரட்டும்.
  • நோய்கள் தாக்காதவாறு பயிர்களை கேடயமாக பாதுகாக்கும்.
  • பூச்சிகளை பயிர்களிடம் அண்ட விடாது.
  • சுவையான உணவுப் பொருட்களை உத்திரவாதம்;.
  • குப்பைகளை விரைவாக மக்க வைத்து உரமாக மாற்றிவிடும்.
  • விதை நேர்த்தி. 
  • ஒரு மில்லி இ.எம். திரவத்தை 1 லிட்டர் தண்ணீருடன் கலக்குங்கள். 
  • இந்த கரைசலில் விதைகளை ஊற வைத்து விதையுங்கள்.
  • விதையின் கடினத்தன்மைக்கு ஏற்ப அரை மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை ஊர வைக்கலாம். 
  • ஊறவைத்த விதைகளை நிழலில் உலர்த்துங்கள்.
  • உலர்த்திய விதைகளை எடுத்து விதையுங்கள் 
  • கரும்புக் கரணைகளை இந்த கரைசலில் 5 நிமிடம் ஊர வைத்து நடலாம்.

மண்ணில் தெளிக்கும் முறை.
  • ஒரு மில்லி இ.எம். திரவத்தை 1 லிட்டர் நீரில் கலக்குங்கள். 
  • கரைசலை பயிரின் மீது அல்லது மண்ணிலும்   தெளிக்கலாம்.
  • மண்ணில் தெளிக்கும் போது கைத்தெளிப்பானை பயன்படுத்துவது நல்லது.
  • கைத் தெளிப்பான் விசைத் தெளிப்பான் இரண்டையும்       பயிர்களுக்குத் தெளிக்க பயன்படுத்தலாம்.   

குப்பைகளை மக்கச் செய்வது எப்படி? 
  • நீளம் 10 அடி  அகலம் 3.5 அடி உடைய பாத்தியில் குப்பைகளை அரை அடி உயரத்திற்கு அடுக்காக போடவும்.
  • இ.எம்.  இரண்டாம் நிலைக் கரைசலை, குப்பை நன்கு நனையுமாறு  தெளிக்கவும்.
  • மீண்டும் அரை அடி உயரத்திற்கு. குப்பையினை பரப்பவும்.
  • இவ்விதம் குப்பைகளை 5 அல்லது 6 அடுக்குகள் பரப்பலாம்.
  • ஓவ்வொரு அடுக்கின் மீதும் குப்பைகள் நன்கு நனையுமாறு,        இ.எம். கரைசலை தெளிக்கவும்.
  • பத்து சதுர அடிக்கு 2 லிட்டர் இ.எம். கரைசல் தேவைப்படும்.
  • குப்பைக் குவியலின் உயரம் 3 முதல ;4 அடி உயரம் இருக்கலாம். 
  • குப்பைக் குவியலின் மீது தென்னை ஓலை, பனை மட்டை, வாழைச் சருகு, மற்றும் கோணிப்பைகள்; கொண்டு மூடவும். 
  • குவியலில் ஈரம் தொடர்ந்து இருக்க வேண்டும்.
  • இதற்கு 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் தெளிக்க   வேண்டும். 
  • குப்பையில் 2 பங்கு பண்ணைக் கழிவுகளும் ஒரு பங்கு சாணக் கழிவும் இருக்க வேண்டும் 
  • பசுந்தழைகள் அதிகம் இருந்தால் மக்கிய குப்பையில்   தழைச்சத்து அதிகம் இருக்கும். 
  • இ.எம். கரைசல் தெளிப்பதால் குப்பைகள் விரைவாக மக்கி உரமாகும்.         
  • முழுவதும் உரமாக மாறிய பின் இதனை பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.
  • 2 முதல் 3 டன்னை  1 ஏக்கர் வயலில் இடலாம்.
  • காய்கறி, பூப்பயிர் மற்றும் பழச் செடிகளுக்கு செடிகளின் வயதுக்;கு ஏற்ப 2 முதல் 5 கிலோ வரை இடலாம்.
  • வயதுக்கு ஏற்ப பழ மரங்களுக்கு 5 முதல் 10 கிலோ வரை     போடலாம்.
இ எம் - நுண்ணுயிர் கூட்டுரம் 
(Image Courtesy: Thanks Googlea)
----------------------------------------------------------------------------------------------------------------

18. அசட்டோ பேக்டர் & அசோஸ்பைரில்லம்

அசட்டோபேக்டர் (Image Courtesy: Thanks Google)
  •     அசட்டோ பேக்டர் ஒரு விதமான நுண்ணுயிர்.
  •     காற்றிலுள்ள நைட்ரஜன் சத்தை நிலைப் படுத்துகிறது.
  •      பயிர்கள் எடுத்துக் கொள்ளுமாறு   நைட்ரஜனை மாற்றித்      தருகிறது.
  •      மண்ணின் வளத்தை கூட்டுகிறது.
  •      பயிரின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
  •      அமில மண்ணைத் தவிர இதர மண் வகைகளில் நல்ல பயனைத் தரும்.
  •      மானாவாரி நிலங்களில்  24  ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கும்.
  •      தனித்து வாழும்  தன்மை உடையது.
  •      என்சைம்கள் உதவியுடன் நைட்ரஜன் -ஐ  நிலைப்படுத்துகிறது.
  •      காட்மியம், மெர்க்குரி, லெட், ஆகியவற்றிலிருந்து      மண்ணைப்       பாதுகாக்கிறது.  
  •      மருந்து தயாரிப்பு மற்றும் உணவு தயாரிப்பில், உதவுகிறது.
  •      அறிவியல் பெயர்: அசட்டோபேக்டர் குருகாக்கம்.
  •      தாவரகுடும்பம்: அசட்டோபேக்ட்டரேசியே
  •      டச்  நாட்டின் விஞ்ஞானி –மார்ட்டீனஸ் பீஸரின்த் என்பவர் முதன்முதலாக இதனைக் கண்டுபிடித்தார்.
அசோஸ்பைரில்லம்
  •     விவசாயிகளிடையே பிரபலமாக விளங்கும் உய்pர் உரம்.
  •     காற்றில் உள்ள நைட்ரஜன்; சத்தை கிரகித்துக் கொடுக்கும் அற்புதம்.
  •      மானாவாரி மற்றும் புழுதிகால் பயிர்களுக்கு       வறட்சியை தாங்கும் சக்தியைக் கொடுக்கும்.
  •     இந்த நுண்ணுயிர் பயிரின் வேர் மீது தனது வீட்டை அமைத்துக் கொள்ளும்.
  •    அங்கிருந்தபடி நைட்ரஜனை இழுத்துப் பிடித்து பயிர்களுக்கு தரும்
  •    விதை நேர்த்தி
  •   அரிசி கஞ்சி 3 லிட்டர் ஐ  தயார் செய்யுங்கள்.
  •    தயார் செய்த அரிசி கஞ்சியை ஆற வையுங்கள்.
  •    ஒரு எக்டருக்கான 3 பாக்கெட் ( 600 கிராம். ) அசோஸ்பைரில்லம் தேவை.
  •  ஆறிய அரிசி கஞ்சியுடன் 600 கிராம் அசோஸ்பைரில்லம் சேர்த்துக் கலக்குங்கள்.
  •  இந்த கலவையுடன்  ஒரு ஏக்கருக்கான  100 கிலோ நெல் விதைகளைப் போடுங்கள்.
  • விதைகளின் மீது இந்தக் கலவை நன்கு பூசிக்கொள்ளும் வகையில் கலக்குங்கள்.
  • இப்படி விதை நேர்;த்தி செய்த விதைகளை 30 நிமிடம் நிழலில் உலர்த்துங்கள்.
  • நிழலில் உலர்த்திய பின்னர் உடனடியாக விதையுங்கள்.
  • இதனால்; பயிர்கள் வறட்சியைத் தாங்கும்.
  • மேலும் தழைச்சத்தையும் நிலைப்படுத்தும்.
  • நெல் நடவு வயலில் இடும் முறை
  • ஒரு எக்டருக்கான 600 கிராம் அசோஸ் பைரில்லத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அதனை தொழு உரத்துடன் கலந்து ஒரு எக்டர் நிலப்பரப்பில்        சீராகத் தூவுங்கள்.
  • பாக்கெட்டுகளை பார்த்து வாங்குங்கள்.  
  • அசோஸ்பைரில்லம் பாக்கெட்டுக்களை வாங்கும்போது   காலாவதி ஆனதா ?  என்று பார்க்கவும்.
  • எந்த தேதிவரை அதனை உபயோகிக்கலாம்? –என்பதை பாருங்கள்.
  • கிழிந்துபோன, நைந்துபோன பாக்கெட்டுக்களை வாங்காதீர்கள்.
  • இதர பயிர்களுக்கு
  •  காய்கறி பயிர்களுக்கும் விதைநேர்த்தி செய்யலாம்.
  •   நாற்றின் வேரில் நனைத்து நடலாம்.
  •   நடவு வயலில் இடலாம்.
  •   பழமரக் கன்றுகளுக்கு 2 முதல் 5 கிலோ இடலாம்.
  •   வளர்ந்த மரங்களுக்கு 5 முதல் 10 கிலோ இடலாம்.
  •   அசோஸ்பைரில்லத்தை இதர நுண்ணுயிர் உரங்களுடன் சேர்த்து இடலாம்.
  •    மறந்தும் ரசாயன உரங்களுடன் சேர்த்து இடக்கூடாது.

22. அசிட்டோபெக்டர்  (யுஉநவழடியஉவநச) அல்லது கருப்பு யூரியா
  • இது தனித்து செயல்படும்.
  • கருப்பு யூரியா என்பது இதன் செல்லப் பெயர்.
  • இது கரும்பு மகசூலை 3 முதல் 5 டன் கூடுதலாக்கும்.
  • இது கரும்புக்கு மட்டுமே சிபாரிசு செய்யப் படுகிறது. 
  • கரணை நேர்த்தி
  •   அசிட்டோபேக்டர் 5 கிலோ எடுத்துக் கொள்ளுங்கள்.
  •    அதனை 100 லிட்டர் தண்ணீருடன் கலக்குங்கள்.
  •    இந்த கரைசலில் ஒரு ஏக்கருக்கான கரும்புக் கரணைகளை முக்கி எடுக்கவும்.
  •  முக்கி எடுத்த கரணைகளை; உடன்  நடவு செய்யலாம்.

  • கரும்பு நடவு வயலில்
  • ஒரு ஏக்கருக்கு 5 கிலோ அசிட்டோபேக்டரை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அதனை 10 லிட்டர் நீரில் கரைத்துக் கொள்ளுங்கள்.
  • இந்த கரைசலை 70 முதல் 80 கிலோ தொழு உரத்துடன்     நன்கு கலக்குங்கள்.
  • இந்தக் கலவையை கரும்புக் கரணைகளின் மீது நட்டபின் தூவுங்கள். 

அசிடொபேக்டர் (Image Courtesy: Thanks Google)



17. நீலப்பச்சை பாசி - அசோலா (BLUE GREEN ALGAE & AZOLLA)

அசோலா (IMAGE COURTESY;THANKS GOOGLE)
  • நீலமும் பச்சையும் கலந்த கலவையான பாசி நீலப்பச்சைப்பாசி.
  •  சயனோ பாக்டிரியா – என்னும் பாக்டீரியா குடும்பத்தின் ஒரு அங்கத்தினர்.
  • நைட்ரோஜினேஸ்  (NITROGENASE)  என்னும் என்சைம் தூண்டிலைப் போட்டு,     வானவெளி நைட்ரஜனை, வளைத்துப் பிடிக்கிறது.
  • பிடித்த நைட்ரஜனை அப்படியே மண்ணில் சேர்க்கிறது.
  • மண்ணில் சேர்ந்த நைட்ரஜனை பயிர்கள்  பகுமானமாய் உணவாகக் கொள்ளுகின்றன.
  • நைட்ரஜன் நிலைப் படுத்துதல்  (NITROJEN FIXATION)    என்று இதைத்தான் சொல்லுகிறோம்.
  • நெல் நடவு செய்த வயலில் 10 நாட்களுக்குள் 4 கிலோ நீலப்பச்சை பாசியை இடுங்கள்.
  • அது ஒரு எக்டரில்  25 கிலோ நைட்ரஜனை மண்ணில் சேர்க்கும்.
  •  நீ.பா இட்ட வயலில் எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்க வேண்டும்.
  • இது ஒரு பாசியினால் பின்னிய பாய் போல வயல் நீரில் மிதந்து கொண்டிருக்கும்.
  • சுள்' ளென்று வெயில் அடிக்கும் பருவத்தில் நீலப்பச்சை பாசி போஷாக்காய் வளரும்.
  • நெல் விவசாயிகளுக்கு நீலப்பச்சைப் பாசி ஒரு பாதுகாப்பான இயற்கை உரம்.
     அசோலா
  • அசோலா ஒரு இரட்டைவால் குருவி
  • நெல் வயலில் போட்டால் அசோலா ஒரு இயற்கை உரம்
  • கறவை மாட்டுக்கு போட்டால் அசோலா ஒரு அசத்தலான தீவனம்
  • கையளவு நிலமும் கைப் பிடியளவு அசோலாவும்இ இருந்தால்  நாமே   அசேலாவை தயாரிக்கலாம்.
  • இதற்காக கடைக்குப்போய் காசு கொடுத்து கைநீட்ட வேண்டாம்.
  • வியட்நாம் நாட்டில் முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது அசோலா.
  • உரமாக அறிமுகமான அசோலா இன்று உலகம் முழுவதும் பிரபலமான கால்நடைத் தீவனம்.

உனக்கு நான் எனக்கு நீ
  • இருபது நாட்கள் வளர்ந்த அசோலாவை வயலில் மிதித்து விட வேண்டும்.
  • முதல் களையெடுப்பின் போது இதனைச் செய்யலாம்
  • அசோலா தண்ணீரில் வளரும் பெரணி.
  • அனாபீனா என்னும் நீலப்பச்சை பாசி தங்கி இருக்க அசோலா இடம் தருகிறது.
  • அனாபீனாவும் அசோலாவும் உனக்கு நான் எனக்கு நீ என வாழ்கின்றன.
  • அனாபீனாவுக்கு வாடகை வாங்காமல் இருக்க இடம் தருகிறது. அசோலா.
  • அது மட்டுமின்றி அறுசுவை தாது உப்புக்களும் வழங்குகிறது.
  • இதற்கு கைமாறாக அனாபீனா காற்றில் இருக்கும் நைட்ரஜன் சத்தை அமுக்கிப் பிடித்து அசோலாவுக்குத் தருகிறது.
  • தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டும் என்று அசோலா      நைட்ரஜன் சத்தை பயிர்களுக்கு வழங்குகிறது.
  • சத்துக்கள் விவரம்
  • தழைச்சத்து  5 – 6 சதம்.
  • மணிச்சத்து 0.5 –0.9 சதம்.
  • சாம்பல்சத்து 2.0 – 4.5 சதம்
  • கால்சியம் 0.4 –1.0 சதம்.
  • மக்னீசியம் 1.5 – 0.65 சதம்
  • இரும்பு  0.06 –0.26 சதம்.
  • மாங்கனீசு 0.11 0.26 சதம்.
  • கொழுப்பு 3.3 –3.6 சதம்.
  • புரதம் 35 –50 சதம்.
  • மாவுப்பொருள் 6.54 சதம்
  • கரையும் சர்க்கரை 3.5 சதம்.
  • சாம்பல் 5.4 10.5 சதம்
  • பச்சையம் 0.4 - 0.75
  • இதில் உள்ள சத்துக்களை கவனித்தால் கால்நடைத் தீவனமாக பிரபலமான ரகசியம் புரியும்.
  • கறவை மாடுகளுக்கு அளித்தால் 15 முதல் 20 சதம்  பால் உற்பத்தியை அதிகரிக்கும்
  • ஒரு முறை உபயோகப்படுத்தினால் போதும்  பிறகு யாரும் மறக்க மாட்டார்கள் அசோலாவை மறக்கமாட்டார்கள்.        
நீலப்பைசைப்பாசி (Image Courtesy: Thanks Google)

16. நுண் உயிர் உரங்கள் (BIO FERTILIERS)

Image Courtesy: Thanks Google
  • பலகோடி நுண்ணுயிர்கள் மண்ணில் வாழ்கின்றன.
  • இவற்றுள் ஒரு சதம் மட்டுமே தீங்கு செய்யக்கூடிய நுண்ணுயிர்கள்.
  • கடைத் தேங்கயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும் காரியத்தை சில நுண்ணுயிர் உரங்கள் செய்கின்றன.
  • காற்று கையில் வைத்திருக்கும் நைட்ரஜன் சத்தினை பிடுங்கி பயிருக்கு கொடுக்கின்றன,
  • சில நுண்ணுயிர் உரங்கள் வாழைப்பழத்தை உறித்துக் கொடுப்பது போல,  தயார்நிலை சத்துக்களாக மாற்றித் தருகின்றன.
  • எட்டாத தொலைவில் உள்ள சத்துக்களின் காதைப் பிடித்து இழுத்து வேர்களிடம் சேர்க்கின்றன.
  • அசட்டோ பேக்டர், அசிட்டோபேக்டர், அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போபேக்டீரியம், நீலப்பச்சைப்பாசி, அசோலா ஆகியவை இந்த அணியைச் சேர்ந்த நுண்ணுயிர்கள்.

நுண்ணுயிர் உரங்களால் கிடைக்கும் பயன்கள்

  •      மண்ணின் அங்ககச் சத்தினை அதிகரிக்கும்.
  •      மண் வளத்தை மேம்படுத்தும்.
  •      வறட்சியை தாங்கி வளரும் சக்தியைத் தரும்
  •      மண்ணின் நீர்பிடிப்புத் தன்மையைக் கூட்டும்
  •      பூச்சி நோய் தாக்குதலை மட்டுப்படுத்தும்
  •      களைகளை கட்டுப்படுத்தும்
  •      சாகுபடி செலவை குறைக்கும்
  •      பயிர் மகசூலை அதிகரிக்கும்
  •      விவசாயத்தை லாபகரமானதாக மாற்றும்
  •      சுற்றுச்சூழலை பாதுகாக்கும்
  •      பருவக்கால மாற்றத்திற்கு இவை பாதுகாப்பு

உயிர் உரங்களின் வகைகள்
  •  உயிர் உரங்களை 3 வகைகளாக பிரிக்கலாம் என்று பார்த்தோம்
  • சத்துக்களை நிலைப் படுத்துபவை.
  • சத்துக்களைக் கரைத்துக் கொடுப்பவை.
  • சத்துக்களை நகர்த்திக் கொடுப்பவை.
  • நிலைநிறுத்தும் உயிர் உரங்கள்;
  • காற்றில் உள்ள நைட்ரஜன்' ஐ  நிலத்தில் நிலை நிறுத்துபவை.      (NITROGEN FIXING BIO FERTILIZERS).
  • அசட்டோ பேக்டர்.  (AZATOBACTER).
  • அசோஸ் பைரில்லம். (AZOSPYRILLUM)
  • நீலப்பப்பை பாசி. (BLUE GREEN ALGAE)
  • அசோலா.   (AZOLLA) 
  • மணிச்சத்தை கரைத்து  நகர்த்திக் கொடுக்கும் உரங்கள்.
  • மணிச்சத்தை கரைத்துக் கொடுப்பவை.  பாஸ்போ பேக்டீரியம்.  (PHOSPOBACTERIUM)
  • மணிச்சத்தை நகர்த்திக் கொடுப்பவை.  (NUTRIENT MOVING BIO FERTILIZERS)
  • உதாரணம். –. மைக்கோரைசா
  • தொலைவிலுள்ள  சாம்பல் சத்தை வேர்களுக்கு அருகில் நகர்த்திக்   கொடுக்கும் உரங்கள். (Bio Fertilizers  - Moves the  distant  Potash   near to roots) 
  •  உதாரணம். –. புரூட்ரியா ஆரான்சியா.  (குசரவசயை யுசயnஉயை.)           
  • பயிர்களுக்கு ஏற்ற உயிர் உரங்களை உபயோகித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • பயிர்களுக்கு தழைச்சத்து அளிக்க ஏற்ற உயிர் உரங்கள்
  • அவரை இன பயிர்களுக்கு – ரைசோபியம்.
  • அவரை இனம் அல்லாத பயிருக்கு – அசிட்டொபேக்டர்,     அசொஸ்பைரில்லம்.
  • நெல் பயிருக்கு நீலப்பச்சை பாசி, அசோலா. மணிச்சத்து அளிக்க ஏற்ற உயிர் உரங்கள்.
  • எல்லா பயிர்களுக்கும்  பாஸ்பாட்டிகா  உயிர் உரத்துடன் ரைசோபியம், அசட்டோபேக்டர், அசோஸ்பைரில்லம், அசிட்டோ    பேக்டர்  சேர்த்து இட வேண்டும்.                       
பயன்படுத்தும் வழிமுறை

1.    விதை நேர்த்தி செய்யும் முறை.
  • ஒரு ஏக்கருக்கு சிபாரிசு செய்யும் உயிர் உரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அதனை ஆறிய அரிசிக் கஞ்சி அல்லது கூழுடன் சேர்த்துக்          கலக்குங்கள்.
  • இந்தக் கலவையுடன் ஒரு ஏக்கருக்கான விதைகளைப் போடுங்கள்.
  • விதைகளின் மீது -இந்த கலவை படியுமாறு கலக்குங்கள்.
  • அப்படியே 30 நிமிடம் விட்டு விடுங்கள்.
  • இப்படி தயார் செய்த விதைகளை, 24 மணி நேரத்திற்குள் விதையுங்கள்

நாற்றங்காலில் தூவும் முறை
  • ஒரு ஏக்கருக்கு சிபாரிசு செய்யும் உயிர் உரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அதனை மண்புழு உரம் அல்லது தொழு உரத்துடன் நன்கு கலக்கவும்.
  • கலக்கிய உயிர் உரத்தை நாற்றங்காலில் சீராகத் தூவுங்கள்.

வேர் நனைக்கும் முறை.
  • ஒரு ஏக்கருக்கு சிபாரிசு செய்யும் உயிர் உரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அத்துடன் 10 லிட்டர் தண்ணீரில், கரைத்துக் கொள்ளுங்கள்.
  •  நாற்றுpன் வேரினை, இந்தக் கரைசலில் 30 நிமிடம் முக்கி வைத்து நடவும்.

மண்ணில் கலக்கும் முறை.
  • ஒரு ஏக்கருக்கு சிபாரிசு செய்யும் உயிர் உரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அத்துடன் போதுமான அளவு, தொழு உரம் அல்லது மண்புழு     உரத்தை கலக்கவும்.
  • இதனை நிலத்தில் சீராகத் தூவி, மண்ணில் கலக்க வேண்டும்.
  • ஜாக்கிரதை.
  • ரசாயன உரங்களை, இத்துடன் சேர்க்கக் கூடாது.
  • பூச்சிப் பூசனை மற்றும் களைக் கொல்லிகளுடன் கலக்கக்கூடாது.
  • காலாவதியான உயிர் உரப் பாக்கட்டுகளா ? என்று பார்த்து வாங்கவும்.
  • எந்த தேதிகு;குள் அதைப் பயன்படுத்த வேண்டும், --என்ற விவரம் பாக்கட்டின் மேல் எழுதி இருக்கும்.
  • நீங்கள் இடும் உயிர் உரம், நேரடி வெயில்பட்டு காய்ந்து விடக் கூடாது.
  • உரம் உலர்ந்து போனால், அது உரமாக பலன் தராது.
  • கிழிந்துப் போன பாக்கெட்டுகளை வாங்க வேண்டாம்
Image Courtesy: Thanks Google

15. பசுந்தாள் உரங்கள் (GREEN MANURES)



மணிலா அகத்தி
  •  தன்னை முழுவதுமாக இன்னொரு பயிருக்கு உரமாக தரும் பயிர்களுக்கு பசுந்தாள் உரங்கள் என்று பெயர், 
  • தனது வேர், தண்டு, இலை தழை என்று தன்னையே தியாகம் செய்கின்றன இவை.
  • இவை முக்கியமாக இரண்டு காரியங்களைச் செய்கின்றன.
  • ஒன்று, பயிர்களுக்கு தேவையான அங்ககச் சத்தையும் ஊட்டச்சத்துக்களையும் அளிக்கிறது. 
  • இரண்டு, பயிருக்கு கிடைக்காத நிலையில் உள்ள சத்துக்களை கிடைக்கும்படி செய்யும் நுண்ணுயிர்களுக்கு உறங்க இடமும் ஊண்ண உணவும் அளிக்கின்றன.
  • இந்த பசுந்தாள் உரங்கள் அனைத்தும் வேர்களில் வேர்முடிச்சுகளை உருவாக்கும் அவரை குடும்பத்தைச் சேர்ந்தவை. 
11. மணிலா அகத்தி ( SESBANIA ROSTRATA)
  •      மணிலா அகத்தி ஒரு பசுந்தாள் உரப்பயிர்.
  •      வேர், தண்டு என இரண்டிலும் வேர் முடிச்சுக்களை உடையது.
  •      குறைவான காலத்தில் அதிகமான பசுந்தாள் உரத்தை தரக்கூடியது.
  •      பல நாடுகளில் இதனை பசுந்தாள் உரமாக பயன்படுத்துகின்றனர்.
  • இதன் தாவரவியல் பெயர் செஸ்பேனியா  ரோஸ்ட்ரேட்டா( SESBANIA        ROSTRATA)
  •      இதனை தமிழில் மணிலா அகத்தி என்றழைக்கிறார்கள்.
  •      களர், உவர் நிலங்கள் இதற்கு ஏற்றதல்ல.
20 டன் பசுந்தாள் உரம்
  • பருவம்: வெப்பமான பகுதிகளுக்கு ஏற்றது.
  • விதைப்பு: விதைகளை சுடுநீரில் முக்கி எடுத்து கடினத் தன்மையை போக்கி விதைக்கலாம்.
  • சீராக நெருக்கமாக விதைகளை விதைக்க வேண்டும
  • விதை அளவு: பசுந்தாள் உரமாக பயன்படுத்த, எக்டருக்கு 40 கிலோ விதை தேவை.
  • கரணைகள்: குச்சிகளை கரணைகளாகவும் நடவு செய்யலாம்.
  • மறுதாம்பு: மறுதாம்பாகவும்; பயிரிடலாம்.
  • 10 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
  • மகசூல: ஒரு எக்டரில்; 20 டன் பசுந்தாள் உரம.


சிறப்புகள்:
  • கூடுதலான வேர் முடிச்சுக்களை உருவாக்குகிறது.
  • கூடுதலான தழைச்சத்தை நிலைப் படுத்துகிறது.
  • இதிலுள்ள கச்சாப்புரதம் (RAW PROTEIN).
  • பயன்படுத்தத் தயார் நிலையில் உள்ளது. 
  • உபரி தகவல்கள்
  • முதன் முதலாக –பசுந்தாள் உரமாக கண்டறிந்தவர்கள செனிகல். நாட்டினர்.
  • பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள சர்வதேச நெல் ஆராய்ச்;சி நிலையம், 1980 ஆம் ஆண்டு இதனை வெளியிட்டது.
  • இதன் சொந்த ஊர்  ஆப்பிரிக்காவிலுள்ள செகல்.
சித்தகத்தி

12. சித்தகத்தி (SESBANIA SPECIOSA)
  • பருவம்: எல்லா பருவங்களும்
  • மண்வகை: எல்லா மண்வகைகளும்.
  • விதை அளவு: 20 முதல் 40 கிலோ.
  • தாவரவியல் பெயர்: செஸ்பேனியா ஸ்பீஸியோசா. (SESBANIA SPECIOSA )

  • இடைவெளி: சீராக நெருக்கமாக விதைக்க வேண்டும்.
  • பாசனம்: 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை.
  • அறுவடை: பசுந்தாள் உரமாக பயன்படுத்த 40 முதல் 60 நாள்.
  • மகசூல: பசுந்தாள் உரம் 1 வெறக்டருக்கு  15 முதல் 18 டன்.
தக்கைப்பூண்டு
13. தக்கைப்பூண்டு  (DAINCHA)
  • ஏற்ற பருவம்:  எல்லா பருவங்களிலும் பயிரிடலாம்.
  • மண்வகை: எல்லாவிதமான மண் வகைகளும் ஏற்றவை.
  • விதைப்பு: சீராக நெருக்கமாக விதைக்க வேண்டும.;                                       
  • பாசனம்: 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை.
  • அறுவடை: 40 முதல் 60 நாட்களில்.
சணப்பை
14. சணப்பை (SESBANIA)
  •  பருவம்: எல்லா பருவங்களிலும் பயிரிடலாம்.
  • மண்வகை: இருமண் பாடான மண் மிகவும் ஏற்றது.
  • தாவரவியல் பெயர்: குரோட்டலேரியா ஜன்சியா.  (CROTALARIA JUNCEA)
  • விதையளவு: 1 எக்டருக்கு 25 – 35 கிலோ.    
  • விதை நேர்த்தி: 5 - பாக்கெட ரைசோபியம் நுண்ணுயிரை விதையுடன்     கலந்து விதைக்க வேண்டும்.
  • இடைவெளி: நெருக்கமாக மற்றும் சீராக .   . விதைக்க வேண்டும்.
  • பாசனம்: 30 நாட்களுக்கு ஒரு முறை.
  • அறுவடை: விதைத்த 45 – 60 வது நாள் மடக்கி உழவு செய்ய     வேண்டும்.
  • மகசூல்: ஒரு எக்டருக்கு 13 – 15 டன்.
பில்லிபயறு

     15. பில்லி பயறு. (PILLEPHESERA)
  • அற்புதமான பசுந்தாள் உரம். அருமையான கால்நடை தீவனம்.
  • இது கொடி வகை பசுந்தாள் உரம.;
  • தாவரவியல் பெயர்:பேசியோலஸ் ட்ரைலோபஸ்( PHASEOLUS TRILOBUS )
  • பருவம்: எல்லா பருவங்களிலும் 
  • மண்: நெல் தரிசு மற்றும் களிமண் 
  • விதையளவு: ஒரு எக்டருக்கு 10 – 15 கிலோ.   
  • இடைவெளி: சீராக நெருக்கமாக விதைக்க வேண்டும்.
  • பாசனம்:25 – 30 நாட்களுக்கு ஒரு முறை.
  • அறுவடை: விதைத்த 60 ஆம் நாள் மடக்கி உழவு செய்வதற்கு முன் 2 அல்லது 3 முறை கொடிகளை வெட்டி பயன்படுத்தலாம்.
  • மகசூல:1 எக்டருக்கு  6  முதல் 7 டன்.
அவுரி

16. அவுரி (WILD INDICO)
  • கால்நடைகளால் மேயாதது.
  •  இரண்டு முதல் நான்கு பருவங்களில் விதைத்தால் போதும். 
  •  பிறகு தானாக முளைத்துவிடும்.
  •  இது வறட்சியை தாங்கும்.
  •  கோடை தரிசில் விதைக்கலாம்.
  •  தாவரவியல் பெயர்:  டெப்ரோசியா பர்புரியா (TEPROSIA PURPUREA)
  •  பருவம்: எல்லா பருவங்களும்.
  • மண் வகை: மணற்பாங்கான மண்ணைத்தவிர மற்ற எல்லா மண் வகைகளும்.
  • விதையளவு: எக்டருக்கு 15 – 20  கிலோ.     
  • விதை நேர்த்தி: வெது வெதுப்பான நீரில் 15 – 20 நிமிடம் விதைகளை ஊறவைத்து விதைக்க வேண்டும்.
  • இடைவெளி: நெருக்கமாகவும் சீராகவும் விதைக்கவும்.
  • பாசனம்: 30 நாட்களுக்கு ஒரு முறை.
  • அறுவடை: விதைத்த 60 நாட்களுக்குள்.
  • மகசூல்: ஒரு எக்டருக்கு 6 – 7 டன்.  
 Images Courtesy: Thanks Google

Sunday, May 29, 2016

14.பசுந்தழை உரங்கள் (GREEN LEAF MANURES)

Image Courtesy: Thanks Google
  • உரத்திற்காக உபயோகப்படுத்த மரங்கள் மற்றும் செடிகளிலிருந்து கழிக்கும் தழைகள்தான் பசுந்தழை உரங்கள். 
  • தழை அதிகம் தரும் எந்த மரத்திலிருந்தும் தழைகளை வெட்டிப் பயன்படுத்தலாம்.
  • ஆனால் சில மரங்கள்தான் வெட்ட வெட்ட துளிர்க்கும் மரங்களாக இருக்கும்வெட்டிக் கெட்டது வேம்பு, வெட்டாமல் கெட்டது பூவரசு என்று பழமொழி உண்டு.
  • வயல் வரப்புகளிலேயே சில விவசாயிகள் மரங்களை வளர்க்கிறார்கள்.
  • உள்ளுரில் கிடைக்கும் தழைகளை வெட்டி இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.உதாரணத்திற்கு சிலவற்றைப் பார்க்கலாம்.
1. பொன்னாவாரை (அ) மஞ்சள் கொன்றை (CASSIA SCIAMEA)
•    சிறந்த தழை தரும், நிறைய தழை தரும., வெட்ட வெட்ட துளிர்க்கும்.

2. சீத்தா (ANNONA SQUAMOSA)
•    சிறந்த தழை தரும், நிறைய தழை தரும், வெட்ட வெட்ட துளிர்க்கும்,
      இதன் தழை பூச்சி தாக்குதலை குறைக்கும்.

3. வேம்பு (AZADIRACHTA INDICA)

•    சிறந்த தழை தரும், நிறைய தழை தரும், வெட்ட வெட்ட துளிர்க்கும்,
இதன் தழை பூச்சி தாக்குதலை குறைக்கும்.

4. புங்கன் (PONGAMIA GLABRA)
•    சிறந்த தழை தரும், நிறைய தழை தரும், வெட்ட வெட்ட துளிர்க்கும்,
இதன் தழை பூச்சி தாக்குதலை குறைக்கும்.

5. எருக்கு (CALOTROPIS GIGANTEA)
•    சிறந்த தழை தரும், நிறைய தழை தரும், வெட்ட வெட்ட துளிர்க்கும்,
இதன் தழை பூச்சி தாக்குதலை குறைக்கும்.

3. தூங்குமூஞ்சிமரம் (SAMANIA SAMAN)
• சிறந்த தழை தரும், நிறைய தழை தரும், வெட்ட வெட்ட துளிர்க்கும்,வளர்ந்த ஒரு மரம் ஓர் ஆண்டில் 0.5 டன் தழை தரும்;.

4. வாகை மரம் (ALBIZIA LABBECK)
•  சிறந்த தழை தரும், நிறைய தழை தரும், வெட்ட வெட்ட துளிர்க்கும்.

5. வாதநாராயணன் மரம் (DELONIX ELATA)
•  சிறந்த தழை தரும், நிறைய தழை தரும், வெட்ட வெட்ட துளிர்க்கும், மற்ற தழைகளைவிட சீக்கிரம் மக்கும்.

6. சூபாபுல் மரம் (LEUCAENIA LEUCOCEPHALA)

• ஆறு மூட்டை தழை ஒரு மூட்டை அம்மானியம் சல்பேட்டுக்கு சமம், வேகவேகமாக வளர்ந்து நிறைய தழை தரும:, வெட்ட வெட்ட துளிர்க்கும், கொரிய நாட்டில் இந்த தழையில் கம்போஸ்ட் தயாரிக்கிறார்கள்.
Image Courtesy: Thanks Google

13. தென்னை நார்க்கழிவு உரம் (COIR WASTE COMPOST)

Image Courtesy: Thanks Google


  • மண்ணின் நீர்பிடிப்புத் தன்மையை அதிகரிக்கிறது.
  • மண்ணின் பௌதீகத் தன்மையை மேம்படுத்துகிறது.
  • இறுக்கமான மண் கண்டத்தை லேசாக மாற்றுகிறது.
  • மண்ணில் அங்கக சத்தினை அதிகரிக்கிறது.
  • பயிர் ஊட்டச்சத்துக்களை மண்ணிற்கு வழங்குகிறது.
  • தென்னை நார் கழிவை உரமாக மாற்றி விடுவதால் சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கிறது.
  • தட்பவெப்பநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளை குறைக்க உதவுகிறது.

தேவைப்படும் பொருட்கள்

  • நிழலுடைய ஒர் இடம்                  
  • தென்னை நார் கழிவு 1000 கிலோ
  • விதைக்காளான் -புளுரோட்டஸ்-  5 பாட்டில்.    
  • யூரியா  5 கிலோ.        .           
  • போதுமான அளவு தண்ணீர்.  (15 முதல் 20 குடம்)


செயல்முறை விளக்கம்
       .                  
  • நிழலான ஓர் இடத்தை தேர்ந்தெடுங்கள்;
  • அது ஒரு மரத்தடியாகவோ கொட்டகையாகவோ இருக்கலாம்.    .       
  • நீளம்  15 அடி   அகலம்  மூன்றறை அடி  அளவுள்ள நிலப்பரப்பை தெரிவு செய்யுங்கள்.
  • இந்த அளவுள்ள பாத்தியினை 4 முனைகளிலும் 4 குச்சிகளை அடித்து  அடையாளம் செய்யுங்கள்.  
  • தென்னை நார்க்கழிவு 1000 கிலோவை  பத்து  சமமான பகுதிகளாக பிரித்துக் கொள்ளுங்கள்.
  • அதில் ஒரு பகுதியை பாத்தியில் பரப்புங்கள்.
  • அதன்மீது சுமார் 3 குடம் தணணீர்; தெளியுங்கள்.
  • ஈரமான தென்னைநார் கழிவின்மீது பாட்டிலில் இருக்கும் விதைக்காளானை வெளியிவ் எடுத்து சீராகத் தூவுங்கள்.       
  • இப்போது இரண்டாவது பங்கு தென்னைநார் கழிவை-  (100 கிலோ)  பாத்தியில் சீராக பரப்பவும்.
  • அதன் மீது தேவையான அளவு தண்ணீர் தெளியுங்கள்.
  • இரண்டாவது அடுக்கு ஈரமான தென்னை நார்க்கழிவின் மீது ஒரு கிலோ யூரியாவை பரவலாக தூவவும்.
  • இப்போது 2 அடுக்கு தென்னை நார்க்கழிவை பரப்பி ஒரு அடுக்கில் விதைக் காளானையும்  இன்னொரு அடுக்கில் யூரியாவையும்  போட்டுள்ளோம்.
  • இதுபோல இருக்கும் தென்னை நார்க்கழிவை 10 அடுக்குகள் போடவும்.
  • இறுதியாக 5 அடுக்குகளில் விதைக்காளானையும் 5 அடுக்குகளில்  யூரியாவையும் போடவும். 
  • இவற்றை போட்டு  முடித்தப் பின் அதன்மீது கொஞ்சம் தென்னை நார்க்கழிவைப் பரப்பி மூடவும்.
  • மேலாக 2 அல்லது 3 குடம் தண்ணீரை தெளிக்கவும்.
  • அதன் பிறகு தினமும் போதுமான அளவு தண்ணீரை தெளிக்கவும்.
  • இந்த தென்னை நார்க்கழிவு 60 வது நாள் வாக்கில்  முழுவதுமாக  உரமாக மாறி இருக்கும்.
  • பார்ப்பதற்கும் காப்பித்தூள் போல கருப்பு மற்றும் காவி நிறக்கலவையாக மாறி விடும்.

தென்னை நார்க்கழிவு உரம் இப்போது தயார்.
  • நிலப்பரப்பு ஒரு ஏக்கரில்  தென்னைநார் கழிவு உரத்தை  5 டன் -வரை போடலாம்.

Image Courtesy: Thanks Google

12. அப்பார்ட்மெண்ட் மற்றும் வீடுகளில் மண்புழு உரம் தயாரித்தல் - VERMI COMPOST IN APARTMENTS

Image Courtesy: Thanks Google

சமையலறைக் கழிவுகளைக் கொண்டு வீடுகளில் மற்றும் அப்பார்ட்மெண்ட்களில் கூட மண்பழு உரம் தயாரிக்கலாம். 
  • உற்பத்தி செய்த மண்புழு உரத்தை தொட்டிகளிலும், பெட்டிகளிலும்; வளர்க்கும் செடிகளுக்கு போடலாம்.
  • இதனால் நச்சுத் தன்மை இல்லாத காய்கறிகளும் பழங்களும் சமையலுக்கு கிடைக்கும்.
  • இதனால் உடல் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பான காய்கறிகள் மற்றும் பழங்களை நீங்களே உற்பத்தி செய்யலாம். 
  • என்னென்ன பொருட்கள் தேவை?
  • சுமார் 10 முதல் 15 கிலோ கம்போஸ்ட் ;தயாரிப்பதற்கு எற்ற ஓரு பிளாஸ்டிக் பாத்திரம். 
  • 2 பாத்திரத்திற்கு ஒரு மூடிபாத்திரத்தின் அடியில் வடியும் நீரை சேகரிக்க ஓர அகன்ற தட்டு. 
  • ஓரு அங்குல அகலத்திற்கு கிழிக்கப்பட்ட அல்லது நறுக்கப்பட்ட நியூஸ் பேப்பர் காகிதங்கள். 
  • (பாத்திரத்தில் 3-ல் ஒரு பங்கு நிரம்பும் அளவிற்கு.)போதுமான அளவு தண்ணீர். 
  • மண்புழுக்கள்  (50 புழுக்களுக்கு குறையாமல்)
  • தேவையான அளவு தோட்டத்து மண்.

செயல்முறை
  • தனி வீடுகளில் (அ) அப்பார்ட்மெண்ட்-களில் கம்போஸ்ட் தயாரிக்க ஏற்ற பிளாஸ்டிக் தொட்டியினை வாங்கிக் கொள்ளுங்கள்.
  • பிளாஸ்டிக் தொட்டி அகன்ற வாயுடையதாக இருக்கட்டும்.தொட்டியை மூடுவதற்கு மூடி கிடைத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்.
  • அந்த மேல் மூடியில் ஓட்டைகளைப் போட்டு காற்றோட்டத்திற்கு வழி செய்யுங்கள்.
  • அதிகப்படியான நீர் வடிவதற்கு ஏற்ப தொட்டியின் அடிப்பகுதியிலும் ஓட்டைகளைப் போடுங்களகிழிக்கப்பட்ட (அ) நறுக்கப்பட்ட காகிதத் துண்டுகளை நனைத்து hட்டியில் போடவும். 
  • நீர் வடியும் அளவிற்கு நனைக்க வேண்டாம்.மேலாக பரப்பப்;பட்டிருக்கும் காகிதங்களை விலக்கி அதில் மண்புழுக்களை விடுங்கள்.
  • மண்புழுக்களோடு கொஞ்சம் தோட்டத்து மண்ணையும் சேர்த்து போடுங்கள்.சிறிது நேரம் வெயிலில் வையுங்கள். 
  • மேலாக இருக்கும் மண்புழுக்கள் காகிதக் குவியலைத் துளைத்துக் கொண்டு உள்ளே செல்லும்.அடுத்து சேகரித்து வைத்திருக்கும், காயகறி; கழிவுகள், பழத்தோல்கள், சமையலறைக் கழிவுகள், அனைத்தையும்; தொட்டிக்குள் பரப்புங்கள்.
  • கழிவுகளுக்கு மேல் நியூஸ் பேப்பர்  துண்டுக்காகிதங்களைப் பரப்புங்கள்.
  • பிளாஸ்டிக் தொட்டி நிரம்பும்வரை சமையலறைக் கழிவுகளையும், தோட்டத்து மண்ணையும் போட வேண்டும்.பின்னர் தினமும் தண்ணீர் தெளியுங்கள். 
  • தொட்டியில் உள்ள கழிவுகள் முழுமையாக மண்புழு உரமாக மாறிவிட்டதா?  என்று பாருங்கள்.
  • மாறிய பின் தண்ணீர் தெளிப்பதை நிறுத்திவிட்டு, 2 (அ) 3  நாட்கள் கழித்து மேலாக மண்புழு உரத்தை மேலாக சேகரிக்கலாம்.
  • தொட்டியின் அடியில் அதிக எண்ணிக்கையில் மண்புழுக்கள் இருப்பதனால்,  தொட்டியினை மீண்டும் மீண்டும் சமையலறைக்  கழிவு மண்புழு உரம் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.
சமையல் கழிவுடன் போடக்கூடாதவை
•    இறைச்சி
•    எலும்புகள்.
•    பால் பொருட்கள் (மோர் தவிர)
•    வளர்ப்பு பிராணிகளின் கழிவுகள்.
•    ரசாயனப் பொருட்கள்.
•    பிளாஸ்டிக் பொருட்கள்.
•    நாறத்தை வகைப்பழக் கழிவுகள்.
•    காய்களின் கழிவுகள்.

சமையல் கழிவுகள் பட்டியல்
  • சாதாரண நியூஸ் பேப்பர் காகிதங்கள்.
  • தேநீர் பைகள். (பிளாஸ்டிக் அல்ல)
  • முட்டை ஓடுகள்.
  • பழத்தோல்கள்
  • மிச்ச சொச்சமான உணவுப் பொருட்கள்.
  • காய்கறிக் கழிவுகள்.
  • உலர்ந்த இலைகள். (சருகுகள்)

சில முக்கிய குறிப்புக்கள்
  • புழுக்கள் அதிகம் இருந்தால்  விரைவில் உரமாக மாற்றிவிடும்.
  • தோராயமாக  10 முதல் 12  வாரங்களில் கழிவுகள் உரமாக மாறிவிடும். 
  • புழு வளர்ப்புத் தொட்டீயின் மூடியின் மேல் போடும் ஓட்;டைகள் காற்றோட்டத்தை அளிக்கும்.
  • தொட்டியின் அடிப்பக்கம் போடும் ஓட்டைகள் அதிகப்படியான நீரை வடிக்கும்.தொட்டியின் பக்கவாட்டிலும்  போடும் ஓட்டைகள் தொட்டியில் உருவாகும் வெப்பத்தை தணித்து காற்றோட்டத்தை ஏற்படுத்தும்.
  • இந்த உரம் தயாரிக்க தொடங்கும்போது மட்டும் மண்புழுக்களை விலை கொடுத்து வாங்கவேண்டும்.
  • மண்புழு உரம் தயாரிப்பவர்கள்  ஒரு புழு ஒரு ரூபாய் என விற்பனை செய்கிறார்கள்.
  • எந்த வகை மண்புழுவை வளர்க்கலாம்?
  • ரெட் விரிக்லர்ஸ் (RED WRIGGLERS) என்று சொல்லப்படும் மண்புழுக்கள் சமையலறைக் கழிவுகளை உரமாக மாற்றுவதில் திறமைசாலிகள்.
  • ஐசினியு  ஃபெட்டிடா (EISENIA FETIDA)என்பது இதன் அறிவியல் பெயர்.
  • இந்த 90 நாட்களில் புழுப்படுக்கையில் விடும் புழக்கள் இரண்டு மடங்காக பெருகி;விடும்.
Image Courtesy: Thanks Googl 



11. கோழிக்கழிவு மண்புழு உரம் (POULTRY WASTE CUM VERMI COMPOST)

Image Courtesy: Thanks Google

  • கோழிக் கழிவைக் கொண்டும் மண்புழு உரம் தயரிக்கலாம்
  • பசும் சாணத்திற்கு பதிலாக மக்கிய கோழிக் கழிவை உபயோகிக்கலாம்.
  • பொட்டாசியம் கால்சியம் மக்னீசியம் போன்ற நுண்;சத்துக்கள் இதில் உள்ளன.
  • நைட்ரஜன், பாஸ்பரஸ், கால்சியம் ஆகியவை மற்ற இயற்கை எருக்களில்  இருப்பதைவிட அதிகம் உள்ளது.                                                           
  • மண்ணில் கரிம சத்தை அதிகரிக்கிறது.
  • நீர் உறிஞ்சும் தன்மை மேம்படுகிறது.
  • பிராணவாயுவைக்  கூட்டுகிறது..
  • உவர் மற்றும் களர்  நிலங்களை  சீர்திருத்துகிறது.

தேவைப்படுபவை                           

  • மரத்தடியில் நிழல் உடைய ஒரு இடம் அல்லது ஒரு சிறு கொட்டகை
  • 1000 முதல் 1500 மண்புழுக்கள், மக்கிய கோழி எரு                                   
  • போதுமான தண்ணீர்.
  • பசுந்தழைகள, புற்கள் மற்றும் இலைச்சருகுகள்.


செயல் விளக்கம்

  • மூன்றரை அடி அகலம் 10 அடி நீளமும் கொண்ட இடத்தில் புழுப்படுக்கை அமையுங்கள். 
  • புழுப்படுக்கை என்பது மண்புழுக்களுக்கு உண்ணவும் உறங்கவுமான இடம்.     
  • மூன்றரை அடி அகலம் 10 அடி நீளத்திற்கு  அரை அடி ஆழுத்திற்கு பள்ளம் எடுக்கவும்.
  • அந்த அரை அடி ஆழமான பள்ளத்தில் 2 அங்குல உயரத்திற்கு மணலை பரப்புங்கள்.
  • மணல் பரப்பின் மீது  தேங்காய் உறி மட்டைகளை அதன் முதுகுப்புறம் கீழே இருக்குமாறு அடுக்கவும்.
  • இப்படி அடுக்குவதற்கு 400 முதல் 500 உறிமட்டைகள் தேவைப்படும்.
  •  உறி மட்டைகளின் மீது 6 அங்குல உயரத்திற்கு மக்கிய கோழி உரத்தினை பரப்புங்கள்.
  • அதன்மீது  2 அல்லது 3 குடம் தண்ணீர் தெளியுங்கள்.
  • தண்ணீரை தெளித்தப் பின்  சேகரித்து வைத்திருக்கும் பசுந்தழைகளை ஒரு அடி உயரத்திற்கு பரப்பவும்.
  • இலை தழைகளைப் போடும்போது  பெரிய கிளைகளைத் தவிர்க்க வேண்டும்.
  • இலை தழை மற்றும் சருகுகளை பரப்பிய பின்னால் அதன்மீது சாணக் கரைசலை  சோரத் தெளிக்க வேண்டும்.
  • அதன்மீது மறுபடியும் 6 அங்குலம் மக்கிய கோழிக்கழிவை  போடவும்.
  • மீண்டும் 1 அடி பசுந்தழை  மற்றும் சருகுகள்  சாணக்கரைசல் தெளிப்பு   என்று இரண்டாவது  அடுக்கையும்  போடவும். 
  • இப்படியாக 2 அல்லது 3 அடுக்குகள் போட்டு போதுமான தண்ணீர் தெளிக்கவும். 
  • சுமார் 3 அல்லது 4 அடி உயரம்வரை    புழுப் படுக்கையை தயார் செய்த பின்னால்  மண்புழுக்களை விடவும். 
  • கடைசியாக  புழுப்படுக்கையை  ஈர சாக்கு கொண்டு மூடி வைக்கவும்.
  • பின்னர் தினசரி புழுப்படுக்கையின் மீது போதுமான தண்ணீர் தெளிக்கவும்.
  • ஐம்பது முதல் 60 நாட்களில் புழுப்படுக்கையில்  இடப்பட்ட கழிவுகளை முழுமையான உரமாக மாற்றிவிடும்.
  • பின்னர் தண்ணீர் தெளிப்பதை நிறுத்திவிட்டு  புழுப்படுக்கையின் மேல்பகுதியில் இருக்கும் மண்புழு உரத்தை  மட்டும் சேகரிக்கலாம். 
  • மண்புழுக்கள் புழுப்படுக்கையின் அடிப்பகுதிக்குச் சென்றுவிடும்.
  • இப்போது புழுப்படுக்கையில் கிட்டத்தட்ட 2 மடங்கு மண்புழுக்கள் அதிகரித்திருக்கும்.
  • அதே புழுப்படுக்கையை பயன்படுத்தி மீண்டும் மீண்டும் மண்புழு உரம்          தயாரிக்கலாம்.                                             

கவனிக்க வேண்டியவை
•    புழுப்படுக்கையில் ஈரம் இவ்லையென்றால் புழுக்கள் இறந்துவிடும்.
•    ஈரம் அதிகம் இருந்தாலும் புழுக்கள் இறந்துவிடும்.
•    புழுப்படுக்கையின் அடியில் போடப்பட்டிருக்கும் தேங்காய் உறி மட்டைகளும் மணலும் அதிகப்படியான நீரை உறிஞ்சிக் கொள்ளும்.
•    புழுப்படுக்கைக்கு நிழல் அவசியம் வேண்டும்.
•    அதிகப்படியான வெப்பத்தை புழுக்கள் தாங்காது.
•    பாம்பு, பறவைகள,; எலி, எறும்புகள,; பிள்ளைப்பூச்சி போன்றவை மண்புழுவை உணவாகக் கொள்ளும்.
அவற்றிலிருந்து நாம் இவற்றை பாதுகாக்க வேண்டும்.

Image Compost: Thanks Google

10. முக்கிய இயற்கை எருக்கள் - (IMPORTANT NATURAL MANURES)

Image Courtesy: Thanks Google


1. கோழி எரு
  • மற்ற இயற்கை உரங்களை ஒப்பிடும்போது இது கூடுதலான சத்துக்களைக் கொண்டது.
  • ஆழ்கூள முறையில் சேகரிக்கும் கோழி எருக்கள் இன்னும் சிறப்பானவை.
  • அதில் உள்ள சத்துக்கள் விவரம்.
  • தழைச்சத்து: 3.03 சதம்.
  • மணிச்சத்து: 2.63 சதம்.
  • சாம்பல் சத்து 1.40 சதம்.
  •  மக்காத புதிய கோழி எருக்களை பயிருக்கு போடக் கூடாது.
  • அல்லது 4 மாதங்கள் நன்கு மக்கிய பிறகே போட வேண்டும்.
2.பிண்ணாக்கு வகைகள்
  • எண்ணெய்வித்துக்களிலிருந்து எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கும் சக்கையின் பெயர் பிண்ணாக்கு. 
  • சாப்பிடக் கூடியவை, சாப்பிடக் கூடாதவை என இரண்டு வகை இதில் உண்டு.
  • இரண்டையுமே பிண்ணாக்காக பயன்படுத்தலாம்.
  • பிண்ணாக்கின் விலை ஆனைவலை குதிரைவிலை ஆகிவிட்டதால் இதனை உபயோகிப்பதில் சிரமம் உள்ளது.
  • பொதுவாக பிண்ணாக்குகளில் கீழ்கண்ட அளவில் சத்துக்கள் உள்ளன.
  • தழைச்சத்து: 2.5 முதல் 7.5 சதம் வரை மணிச்சத்து: 0.8 முதல்  4.0 சதம் வரை.
  • சாம்பல் சத்து: 1.2 முதல் 2.2 சதம் வரை.
3. மக்கு உரம் அல்லது கம்போஸ்ட் உரம்
  • முறையாக மக்க வைத்த அங்கக உரத்தின் பெயர் கம்போஸ்ட் 
  • மக்க வைக்கும் பொருட்களுக்கு ஏற்ப சத்துக்கள் வேறுபடும்.
  • எல்லா இயற்கை எருக்களைப் போலவும் இது பயிர்களுக்கு தாய்ப்பால் மாதிரி.
  • தாவரக் கழிவுகள், கால்நடைகக் கழிவுகள், மனிதக் கழிவுகள், கிராமக் குப்பை, நகரக் குப்பை, இப்படி எல்லாவற்றையும் மக்கவைக்கலாம்.
  • மக்கவைத்து இயற்கை உரமாக மாற்றலாம்.அங்ககப் பொருட்களை மக்க வைக்க சில நுண்ணுயிர்களும், பேருயிர்களும் முக்கிய பங்காற்றுகின்றன.
  • மண்புழுக்கள், சாணக்கரைசல், அமுதக்கரைசல், புளுரோட்டஸ் காளான் வித்துக்கள், இ.எம். நுண்ணுயிர்க்கரைசல் ஆகியவை மகத்தான உதவி செய்கின்றன மக்கு உரம் தயாரிக்க.
  • மக்கு உரங்களை எல்லா பயிர்களுக்கும் இடலாம்.
  • மண்புழு உரம், தென்னை நார்க்கழிவு உரம் போன்றவை அனைத்தும் இந்த வகைகளே.
Image Courtesy:Thanks Google

9. ஆட்டு எரு (GOAT MANURE)

Image Courtesy: Google


  • நடமாடும் வங்கி என்பது  விவசாயிகள் ஆடுகளுக்கு வைத்திருக்கும் செல்லப் பெயர்.                                          
  • ரசாயன  உரங்கள் வருவதற்கு முன் நமக்கு குப்பை உரமும், ஆடு மாடுகளின் சாணமும், மரங்களின் தழைகளும், உரப்பயிர்களும்தான்  நம் விவசாயத்தின் உயிர் மூச்சு.                                          
  • அதிலும் குறிப்பாக ஆட்டுக்கிடை போடுதல் நமக்கு பாரம்பரியமான வழிமுறை.
  • ஆடுகளின் சாணம் சிறுநீர் ஆகியவற்றை நிலங்களில் சேகரிப்பதற்கான        எற்பாடுதான்  இது.
  • ஆட்டுரம் நிலத்தில் அங்ககச்சத்தை அதிகரிக்கிறது.
  • நுண்ணுயிர்களின்  செயல்பாட்டினை  ஊக்குவிக்கிறது.                      
  • ஆட்டுரம் உற்பத்தி செய்யும் விளைபொருட்கள் நம் ஆரோக்கியத்திற்கு           பாதுகாப்பானவை.                                                   


கிடையினால் கிடைக்கும் சத்துக்கள்

  • வயலுக்கு இயற்கையாக ஆடுகளின் சாணமும் சிறுநீரும் கிடைக்கிறது.    
  • ஆட்டுசாணத்தில் தழைச்சத்து  0.9 சதமும்,  மணிச்சத்து  0.6 சதமும்,           சாம்பல் சத்து  1.00 சதமும்  உள்ளன.                                 
  • ஆட்டு சிறுநீரில் தழைச்சத்து 1.7 சதமும்,  சாம்பல்சத்து  2 சதமும்          உள்ளன. 
  • இவை தவிர சுண்ணாம்புசத்து போன்ற நுண்சத்துக்களும் இதில்          அடக்கம்.                                                        
  • ஆட்டு சாணத்தில்  30 சதம்  சத்துக்கள் முதல் ஆண்டும்  70 சதம்             சத்துக்கள்  இரண்டாம் ஆண்டும் கிடைக்கும்.                               
  • ஆட்டு சிறுநீரில் உள்ள சத்துக்கள் முதல் ஆண்டே கிடைக்கும்.   

 ********************************************************************************   ஆடு தீனியும் தின்கிறது –அதற்கான பணத்தையும் அது செலுத்தி விடுகிறது. ஆல்பேனியன் பழமொழி                                                    

8. தொழு எரு (FARMYARD MANURE)

Image Courtesy:Thanks Google
  • குப்பை இடாத பயிர் சப்பை என்பது பழமொழி. 
  •  ரசாயன உரங்கள் வருவதற்கு முன்னால் பயிர்களுக்கு இடும். 
  • முக்கியமான உரம் இது.
  • பயிர்க்கழிவுகளும் கால்நடைகளின் சாணமும் சேர்ந்ததுதான் தொழு உரம். 
  • ஒவ்வொரு வயலிலும் ஒரு எருக்குழியை இன்றும் கூட பார்க்கலாம்
  • இந்த எருக்குழியில் சேரும் அத்தனை கழிவுகளும் ஒன்று சேர்ந்து ஒரு வருஷக் கடைசியில் எருவாக மாறிவிடும்.
  • இப்படி சேரும் தொழு எருவை ஆணடுக்கு ஒருமுறை எடுத்து பயிருக்கு இடுவார்கள்.
  • வாலு போயி கத்தி வந்தது டும்டும் என்பது மாதிரி தொழு உரம் போயி ரசாயன உரம் வந்தது.
  • டிராக்டர் வந்தது மாடுகள் போனது.
  • தொழு உரம் என்ற பெயர் நமக்கு மறந்து போனது. 
  • இயற்கை விவசாயம் பற்றி பேச ஆரம்பித்ததும் தொழு உரம் இப்போது மறு பரிசீலனைக்கு வந்துள்ளது;.
  • இதில்; குறைவான பயிர்ச் சத்துக்கள் இருந்தாலும் மண்னை பொன்னாக்குவதில் நிறைவான பணி செய்கிறது.
  • இது எல்லா இயற்கை உரங்களுக்கும் பொருந்தும்.
  • தொழு உரத்தில் உள்ள சத்துக்கள் விவரம்
  • தழைச் சத்து: 0.2 சதம், மணிச்சத்து: 0.5 சதம், சாம்பல் சத்து: 0.2 சதம்.

Image Courtesy: Thanks Google

7.இதர இயற்கைமுறை பயிர்பாதுகாப்பு (OTHER ORGANIC PLANT PROTECTION)

Image Courtesy: Thanks Google


7.1. அடுப்பு சாம்பல் 
  • அடுப்பு சாம்பல்தூள் அல்லது உலர்ந்த சாணத்துகளை காலைநேரத்தில் பனிஈரத்தில் தூவி அவரை அசுவணியைக் கட்டுப் படுத்தலாம்.
7.2. காகிதப்பூச்செடி (அ) வெற்றிலை
  • 75 முதல் 100 கிராம் காகிதப்பூச்செடியின் இலை அல்லது வெற்றிலை  இலைகளை இடித்து ஒரு லிட்டர் நீரில் ஒரு இரவு ஊரவைத்து அடுத்தநாள் இலைக் கரைசலை வடித்து எடுத்து காய்கறிப் பயிர் நாற்றங்காலில் தெளித்து நாற்றழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
7.3. புளியன் இலை
  • 100 கிராம் புளியன் இலைகளை இடித்து 1 லிட்டர் நீரில் கலந்;து 24 மணிநேரம் ஊரவைத்து வடித்து அத்துடன் 4 மில்லி காதி சோப்புக் கரைசலை சேர்த்து நன்கு கலக்கி கைத்தெளிப்பான் கொண்டு மாலை வேளையில் நாற்றங்காலில் தெளித்து தக்காளி நாற்றழுகல் நோயைத் தடுக்கலாம்.
7.4. தென்னைஓலை
  • தக்காளிப் பயிரைத் தாக்கும் புள்ளி வாடல் நோயைத் தடுக்க சிறந்தது.
  • இதற்கு 100 கிராம் தென்னை ஓலைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு ஒரு லிட்டர் நீரில் இட்டு 24 மணி நேரம் ஊர வைத்து பின்னர் கரைசலை வடிகட்டி 4 மில்லி காதி சோப்புக் கரைசல் சேர்த்து, கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.
                  
7.5. மீன்எண்ணெய்
  • மீன்எண்ணெய் திரவசோப் ஒரு கிலோவை ஐம்பது லிட்டர் நீரில் கலந்து தெளித்து மல்லிகை செதில் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

7.6. கண்ணிப்பயிர்
  • தட்டைப்பயறு
  • நிலக்கடலையுடன் தட்டைப்பயறு பயிரை சேர்த்து விதைப்பதால் தத்துப்பூச்சி இலைப் பேன் மற்றும் அசுவணிப் பூச்சிகள் நிலக்கடலையை தாக்குவது குறையும். 
  • இந்தப்பூச்சிகள் அனைத்தும் தட்டைப்பயறு பயிரைத் தாக்கும். நிலக்கடலை தப்பித்துக் கொள்ளும்.
  • செண்டுமல்லி
  • கோலியஸ் மருந்து பயிரில் வேர்முடிச்சு நூற் புழுக்கள் மகசூலைக் குறைத்துவிடும். 
  • இந்த வயல் வரப்புகளில் ஊடுபயிராக செண்டுமல்லியை பயிரிடுவதால், இதன் வேர்களிலிருந்து சுரக்கும் ஒருவகை திரவம் இந்த வேர்முடிச்சு நூற்புழுக்களை அழித்துவிடும்.
  • இதே போல் செங்காந்தள் பயிரிடும் வயலில் செண்டுமல்லி பயிர் செய்வதால், இதனைத் தாக்கும்  கொண்டைக் கருகல் என்னும் நச்சுயிர் நோயையும் வராமல் தடுக்கலாம்.  
7.7. விளக்குப்பொறி
  • இரவு நேரத்தில் வயலில் விளக்குப் பொறி வைத்து நிலக்கடலை சுருள் பூச்சிகளின் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • இதனால் சுருள் பூச்சியின் தாக்குதலை கணிசமான அளவில் குறைக்க முடியும்.
7.8. எருக்கு இலை
  • 8 முதல் 10 கிலோ எருக்கன் இலைகளை ஒரு பாத்திரத்தில் இட்டு, அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, 24 மணி நேரத்திற்கு, ஊறவைத்து வடிகட்டி அதனைத் தெளிப்பதன் மூலம் கரையானை தடுக்கலாம்.



7.9. பெருங்காயம்.
  • பழ மரங்களின் வேர்ப்பகுதியில், பெருங்காயத்தூளை இடுவதன் மூலம், பூக்கள் மற்றும் காய்;கள் உதிர்வதைத் தடுக்கலாம்.
7.10. கோமியம்
  • இரண்டு நாட்களுக்கு முன் சேகரித்த பசுமாட்டின் கோமியம் ஒரு லிட்டருடன் 5 லிட்டர் தண்ணீர் சேர்த்த கரைசலில், முளைவிட்ட 35 கிலோ நெல் விதைகளை 30 நிமிடம் ஊற வைத்து 15 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைக்க, அந்த நெற்பயிர் இலைப்புள்ளி நோய்க்கு எதிர்ப்புத்திறன் பெறும்.
  • கோமியத்தின் அளவு ஊறவைக்கும் நேரம் ஆகியவற்றை அதிகரித்தால் விதைகளின் முளைப்புத் திறன் பாதிக்கும்.
7.11. பசும்பால்
  • ஒரு லிட்டர் பாலுடன், 5 லிட்டர் தண்ணீர் கலந்து, அதில் 35 கிலோ முளைவிட்ட நெல் விதைகளை முக்கி வைத்து 30 நிமிடம் ஊறவைத்து, பின் நிழலில் உலர்த்தி விதைப்பதன் மூலம், அந்த பயிருக்கு துங்ரோ நோயைப் பரப்பும் பச்சை தத்துப் பூச்சிகளை எதிர்க்கும் சக்தி கிடைக்கும்.
  • புகையிலை நாற்றுக்களை நடுவதற்கு முன், பாலில் விதைகளை நனைத்து நடுவதனால் தேமல் நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது என்பது ஆந்திரா விவசாயிகளின் அனுபவம்.
7.12. வசம்பு
  • 250. கிராம் வசம்புத் தூளை 3 லிட்டர் நீரில் கரைத்து தயாரித்த கரைசலில் 5 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதில் 35 கிலோ நெல் விதைகளை 30 நிமிடம் ஊறவைத்து பின் 10 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைப்பதால், அந்த பயிர் நோய்களுக்கான எதிர்ப்புசக்தியை பெறுகிறது.

7.13. வசம்பு-பூண்டு-ஆரஞ்சுஇலை
  • வசம்பு – பூண்டு – ஆரஞ்சு இலை --- இவற்றின் தூளை, சம அளவு 5 கிராம் கலந்துகொண்டு, அத்துடன் 10 மில்லி கடலையெண்ணெய் ( அ ) விளக்கெண்ணெய் சேர்த்து, சேமிக்கப்படும் 1 கிலோ தானிய பருப்புடன் கலந்து வைத்தால், பூச்சிகள் எதுவும் அருகில் வராது. 
  • இந்த முறை பழங்குடி மக்களின் பழக்கத்தில் இன்றும் உள்ளது.
Image Courtesy: Thanks Google

6. உயிரியல் முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்துதல் (BIOLOGICAL PEST CONTROL)

Image Courtesy: Thanks Google

  • பூச்சிகள் அல்லது இதர உயிரினங்களைக் கொண்டு பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைக்கு உயிரியல் கட்டுப்பாடு என்று பெயர்.
  • பூச்சிகளில் நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள் என இரண்டு வகை உண்டு
  • நன்மை செய்யும் பூச்சிகளைக் கொண்டு தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும் முறைதான் உயிரியல் கட்டுப்பாட்டு முறை.
6.1. குளவிகள் (WASP)
  •  'செலோனஸ்  பினாகபானி 'என்னும் குளவி வகையை பயன்படுத்தி வெண்டையைத் தாக்கும் காய்ப்புழவில்   இளம் புழுக்களை அழிக்கலாம். 
  • இதற்கு ஒரு ஏக்கருக்கு 40000 வீதம் குளவிகளை வெளியிட வேண்டும்.
  • 6.2. டிரைக்கோகிரம்மா (TRICHOGRAMMA)
  • தக்காளி பச்சை காய்புழுக்களை முட்டை ஒட்டுண்ணிகள் சிறப்பாக கட்டுப் படுத்தும்.
  • பூக்கும் சமயத்தில் டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் (TRICHOGRAMMA CHILONIS)என்ற முட்டை ஒட்டுண்ணிகளை வயலில் விட வேண்டும்.
  • இந்த முட்டை ஒட்டுண்ணிகளை விட்டு தக்காளி பச்சைக் காய்ப் புழுக்களின்; முட்டைகளை அழிக்கலாம்.
6.3. என் பி வி  வைரஸ் (N P V  VIRUS)
  • என் பி வி  வைரஸ் தாக்கிய 300 புழுக்களிலிருந்து எடுக்கப்பட்ட சாரத்தை 200 கிராம் டினோப்பால், 500 கிராம் சர்க்கரை ஆகியவற்றை  200 லிட்டர் நீருடன் கரைத்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க தக்காளி, மிளகாயைத் தாக்கும் புரோடீனியா புழுக்கள் கட்டுப்படும்.
  • என் பி வி  தாக்கப்பட்ட 1000 புழுக்களின் சாரத்தை 300 கிராம் பருத்தி விதைக் கரைசல் ஆகியவற்றை 200 லிட்டர் நீருடன் நன்கு கலந்து கைத் தெளிப்பான் கொண்டு தெளிக்க, வெண்டை, தக்காளி மிளகாயைத்  தாக்கும் காய்ப்புழுக்கள் கட்டுப்படும்.
  • என் பி வி நச்சுயிரியால் தாக்கப்பட்ட 300 புழுக்களைத் தண்ணீரில் ஊர வைத்து  200 மில்லி நச்சுயிரி கரைசலுடன், 100 மில்லி ஒட்டும் திரவம் சேர்த்து அத்துடன் 100 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரத்தில் கைத் தெளிப்பான் மூலம் ஒரு ஏக்கர் வயலில் தெளித்து சிவப்புக் கம்பளிப்புழுவை கட்டுப்படுத்தலாம்.
  • என் பி வி   நச்சுயிரி  தாக்கப்பட்ட 300 புழுக்களை தண்ணீரில் ஊர வைத்து இதன் முலம் கிடைக்கும் 200 மில்லிநச்சுயிரி கரைசலுடன் ஒரு கிலோ வெல்லம், 100 மில்லி டீப்பால் மற்றும்  150 லிட்டர் தண்ணீர் கலந்து, ஒரு ஏக்கர் பரப்பில் மாலை வேளையில் கைத்தெளிப்பானால் தெளித்து நிலக்கடலை படைப்புழு (அ) வெட்டும் புழுவை (ARMY WORM OR CUT WORM) தடுக்கலாம்.
6.4. பேஸில்லஸ் துரிஞ்சியன்சிஸ் (BACILLUS THURINJIENCIS)
  • ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் பேஸில்லஸ் துரிஞ்கியன்சிஸ் பேக்டீரியாவைக் கரைத்து பயிரின்மீது தெளிக்க, கீரை இலைப்புழுக்கள் புகையிலைப்புழு மற்றும் வெண்டைக் காய்ப்புழு கட்டுப்படும்.

6.5. டிரைகோடெர்மா விரிடிஸ் (TRICHODERMA VIRIDIS)
  • டிரைகோடெர்மா விரிடிஸ்  (அ)  சூடோமேனாஸ் ப்ளுரசன்ஸ்(PSEUDOMONAS FLUOROSECENS)   2.5 கிலோவை 50 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து வயலில் தூவி மல்லிகை வாடல் நோயைத் தடுக்கலாம்.
6.6. சூடோமோனாஸ் ஃப்ளுரசென்ஸ்
  • சூடோமோனாஸ் ஃப்ளுரசென்ஸ்  (அ)  டிரைகோடெர்மா விரிடி 25 கிலோவை 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து, விதைத்த 30 நாட்களுக்குள் மண்ணில் இட்டு எள் வேரழுகல்நோயைத் தடுக்கலாம்.
  • சூடோமோனாஸ் ஃபுளுரஸ்சன்ஸ் 1.5 கிலோவுடன்  20 கிலோ  தொழுஉரத்தைக் கலந்து ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் இட நிலக்கடலை வேரழுகல் நோயை  கட்டுப்படுத்தலாம்.
  • எக்டருக்கு 5 கிலோ சூடோமோனாஸ் ஃப்ளுரசன்ஸ் என்ற பாக்டீரியா மருந்தை 250 கிலோ தொழுஉரத்துடன் கலந்து இட்டு கோலியஸ் பயிரைத் தாக்கும் பாக்டீரியல் வாடல் (BACTERIAL WILT)நோயை தடுக்கலாம்.

6.7. பிவேரியா பேசியானா (BIVERIA BACIANA)
  • “பிவேரியா பேசியானா“  என்னும் பூசணத்தை ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளித்து செங்காந்தள் இலைப்பேனைக் கட்டுப் படுத்தலாம்.

6.8 இதர நன்மை செய்யும் ஒட்டுண்ணிகள்
எண்    ஓட்டுண்ணி    கட்டுப்படுத்தப்படும் பூச்சிகள்; ஃ பயிர்    வெளியிடும் அளவு ஃ ஏக்கர்    குறிப்புகள்.
முட்டை  ஓட்டுண்ணிகள்

1. டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் - முட்டைஓட்டுண்ணி.  
2. செலோனஸ் பினகாபானி -      முட்டைஓட்டுண்ணி.
3. கிரைசோபொலவின் இளம்புழுக்கள் - முட்டைஓட்டுண்ணி
.4. டிரைக்கோகிரம்மா கைலோனி    -    முட்டைஒட்டுண்ணி.
5.    டெரினோமஸ்;  பெனிபிசியன்ஸ்    - முட்டைஒட்டுண்ணி
6    டைப்பா சாறுண்ணிப்புழு - சாறுண்ணி
7.    மைக்ரோடிஸ்  சாறுண்ணிப்புழு    
8.    சிம்னஸ்- பொறி       வண்டு.
9    கிரிப்போரிமஸ் மாஸ்ட்ரோலி - பொறி     வண்டு
10.   சுகிரோபேஸிஸ்      பப்பாயே - பொறி    வண்டு
11.    சைக்கோகிரம்மா   பைக்கலரேட்டா - வண்டுகள்
12    இனக்கவர்ச்சிப் பொறி    
13.    அசிரோபேகஸ்     பப்பாயே - ஓட்டுண்ணிகள்
14.    இனக்கவர்ச்சிப் பொறி   
15.    பிரக்கான்    - குளவி       ஒட்டுண்ணி.
16.    தொழு வெட்டுக்கிளிகள் - வெட்டுக்கிளி
17.    பொறிவண்டு (அ)    கூனல்வண்டு, கரிப்டோவீமஸ்     ஸ்கைமினஸ்   தவாடாலியா - வண்டுகள்    குளவி     ஒட்டுண்ணி.
   
6.9. வேம் என்னும் வேர் உட்பூசணம்
  • ஒரு சதுர மீட்டருக்கு 100 கிராம் வேர் உட்பூசணத்தை (வெசிக்குலர் ஆர்பஸ்குலர் மைக்கோரைசா )  இட்டு காய்கறி பயிர்களைத் தாக்கும் வேர்முடிச்சு நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.     
Image Courtesy: Thanks Google

5. பூச்சிகளையும் நோய்களையும் கட்டுப்படுத்தும் மூலிகை பூச்சிவிரட்டி மற்றும் குணபஜலா (HERBAL PESTICIDE & GUNABAJALA)

Image Courtesy: Thanks Google

  • தழுதாழை வேர்த்தூளுடன் கோமியம் சேர்த்து, 3 நாட்கள் கோமியத்தில் ஊறவைத்து, 70 சதத்துடன் 30 மூ குணபஜலா கரைசல் சேர்த்து தெளிக்க, பூசணத்தால் ஏற்படும் இலை மற்றும் தண்டுக் கருகல் நோயைக் (LEAF CUM STEM BLIGHT) கட்டுப்படுத்தும். தாக்குதலுக்கு முன்னதாக தெளிக்க வேண்டும்.
  • தழுதாழை வேர் மற்றும் இலைகளை பொடிசெய்து, கோமியம் சேர்த்து, மூன்றுநாள் நொதிக்க வைத்து, அதில் 60 சதம் எடுத்து அத்துடன் 10 சதம் பாலும், 30 சதம் குணபஜலாவும் சேர்த்து, மொத்தம் 200 லிட்டர் கரைசல் கிடைக்கும் அளவு தண்ணீரில் கலந்து, பயிர்களின்மீது தெளிக்க வைரஸ் நோய் (VIRUS DISEASE) வராது.
  • வைரஸ்நோய் அறிகுறி தோன்றியவுடன்,  வாரம் ஒருமுறை தெளிக்கலாம். அத்துடன் பயிர்களின் (அ) செடிகளின் வேர்ப்பகுதிகளிலும், கரைசலை ஊற்றலாம். வளர்ந்த மரத்திற்கு 5 லிட்டர் வரை,  இரு வாரங்களுக்கு ஒருமுறை ஊற்றலாம்.  

5.5. குணபஜலா - கடுகுத்தூள்
  • கடுகுத்தூள், தேன், பால் மூன்றையும் கோமியத்துடன் சேர்த்து, 3 நாட்கள்  நொதிக்க வைத்து, 70 சதம்  அளவு எடுத்துக்கொண்டு அத்துடன் 30 சதம்  குணபஜாலா கரைசலை சேர்த்து பயிரின் மீது தெளிக்க, இலை அடிச் சாம்பல் நோயை (DOWNY MILDEW) கட்டுப்படுத்தலாம். பயிர்களில் இலைகளை குளிப்பாட்டுவதைப் போல தெளிக்க வேண்டும்.

5.6. குணபஜலா - பால் - தேன் 
  • 68 சதம் பால், 2 சதம் தேன், குணபஜலா 30 சதம் சேர்த்து, பயிர்மீது தெளிக்க சாம்பல் நோய் (POWDER MILDEW) கட்டுப்படும். 
  • இதனை பூக்கும் தருவாயில் 10 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

5.7. குணபஜலா - வெண்கடுகு
  • 30 சதம் குணபஜலா, 60 சதம் பால், 3 சதம் வெண்கடுகு தூள் சேர்த்து, அத்துடன் 7 சதம்  கோமியமும் சேர்த்து நொதிக்க வைத்து பயிர் இலைகளின்மீது பூக்கும் முன் 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க, துரு நோய் (RUST) கட்டுப்படும். இதனால்; வெண்துரு நோயைக்  கட்டுப்படுத்த இயலாது. 

5.8. வேப்பம்பட்டை - தழுதாழை
  • வேப்பம்பட்டை மற்றும் தழுதாழை இலைகளை பொடித்த தூள் 30 சதமும், அத்துடன் கோமியம் 70 சதமும் சேர்த்து, 3 நாட்கள் நொதிக்க வைத்து, அதில் விதைகளை ஒரு இரவு முழுக்க ஊறவைத்து, எடுத்து நிழலில் உலர்த்தி விதைத்து, வேர்களைத்தாக்கும் நூற்புழுக்களை(ROOT NEMATODES) கட்டுப்படுத்தலாம். 
  • செடிகள் மற்றும் மரங்களுக்கு 5 முதல் 10 லிட்டர் வரை அவற்றின் வயதுக்கேற்ப வேர்ப்பகுதிகளில் ஊற்றலாம். 


5.9. சாணம் கரைசல் 
  • 10 கிராம் சாணத்திற்கு ஒரு லிட்டர் நீர் என்ற அளவில் கரைசல் தயாரித்து, அதில் விதைகளை 10 நிமிடம் ஊறவைத்து நிழலில் உலர்த்தி, விதைத்தால், விதைஅழுகல் மற்றும் நாற்றழுகல், நோயைத் தடுக்கலாம். 

5.10. பால் - கோமியம்
  • 50 சதம் பால், 50 சதம் கோமியம், இரண்டையும் சேர்த்து 3 நாட்கள், நொதிக்கும்படி வைத்திருந்து, அதில் விதைப்பதற்கான விதைகளை ஒரு இரவு முழுக்க வைத்திருந்து, நிழலில் உலர்த்தி விதைப்பதால், விதைமூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

5.11. மூலிகை பூச்சிவிரட்டி (HERBAL PESTICIDE) 

  • முதலில் 5 விதமான இலை தழைகளை தேர்ந்தெடுத்து வகைக்கு 2 கிலோ என 10 கிலோ தழைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 
  • ஆடாதொடா, நொச்சி, புங்கன் போன்ற ஆடு மாடு தின்னாத தழைகளில் ஒன்று, 
  • எருக்கு, வெப்பாலை, ஊமத்தை போன்ற பறித்தால் பால் வருபவற்றில் ஒன்று, 
  • வேம்பு, சோற்றுக் கற்றாழை, போன்ற கசப்பு சுவை உள்ளவற்றில் ஒன்று, 
  • காட்டாமணக்கு போன்ற உவர்ப்பு சுவை உள்ளவற்றில் ஒன்று அல்லது இரண்டு என 5 வகை தழைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இலை தழைகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு அத்துடன்  100 முதல் 200 கிராம் வேப்பங்கொட்டைத் தூளையும் சேர்த்து ஒரு பெரிய பாத்திரத்தில் இட்டு கொதிக்க வையுங்கள்.
  • கொதித்த பின்னர் இறக்கி ஆற வைத்து வடிகட்டி அத்துடன் 100 லிட்டர் நீரையும் 100 மில்லி சோப்புக் கரைசலையும் சேர்த்து கலக்க வேண்டும்.
  • இந்த மூலிகை பூச்சி விரட்டி கரைசலை பயிர்களின் மீது கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். ஒரு ஏக்கரில் தெளிக்க கைத்தெளிப்பான் என்றால் 200 லிட்டரும் விசைத்தெளிப்பான் என்றால் 60 லிட்டரும் தேவை.


Image Courtesy:Thanks Google