உங்க நிலத்து மண்ணுக்கு உயிர் இருக்கா ? இல்லையா ?
இதை எப்படி கண்டுபிடிக்கறது ? அதுக்கு வழி இருக்கு.
உங்கள் நிலத்து மண்ணைத் தோண்டிப் பாருங்கள். அதில் மண் புழு இருக்கிறதா?
இருந்தால் உங்கள் மண்ணில் உயிர் இருக்கிறது.
ரசாயன உரங்களைப் போட்டு, மண்ணில் இருந்த நுண்ணுயிர்களை எல்லாம் அழித்து விட்டோம்.
நுண்ணுயிர்கள் இல்லாத மணணும் உயிர் இல்லாத மண்ணும் ஒன்றுதான்.
மண்ணின் ; உற்பத்தி திறன் குறைந்து விட்டது. மகசூல் குறைந்து விட்டது. வருமானம் குறைந்து விட்டது. லாபமும் குறைந்து விட்டது.
ரசாயன உரங்களும், பூச்சி மருந்துகளும் கைகோர்த்தபடி, விவசாயம் லாபகரமான தொழில் இல்லை என்ற கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்து விட்டன.
நாம் உற்பத்தி செய்யும் பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களை எல்லாம் உரங்களும் பூச்சி மருந்துகளும் ஆட்சி செய்கின்றன.
ஒரு காலத்தில் இந்தியாவில் உற்பத்தி செய்யும் விவசாய விளை பொருட்களை மகிழ்ச்சியாக இறக்குமதி செய்தனர், வெளிநாட்டினர்.
ஆனால் இன்று, நம் பயன்படுத்தும் மிகையான ரசாயன உரங்களையும் பூச்சி மருந்துகளையும் பார்த்து பயப்படுகிறார்கள்.
அடுத்த மாநிலத்தவர் கூட அஞ்சுகிறார்கள். நம் உற்பத்தி செய்யும் பசும்பாலில் கூட பூச்சி மருந்துகளின் தாக்கம் இருப்பதால் உங்கள் பால் வேண்டாம் என்கிறார்கள்.
இன்றைய விவசாய பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு, மண்புழு உரம் மட்டும் தான்.
Image Courtesy: Thanks Google |
No comments:
Post a Comment