Select Your Favorite Topic! Enjoy Reading!!

Monday, June 13, 2016

பயமுறுத்தும் பருவக்கால மாற்றம் - 3

Image Courtesy: Thanks Google

பருவக்கால மாற்றத்தினால் பருவ மழைக் காலம் தவறிப்போய்விடுகிறது.

சுனாமி, வரட்சி, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்கள், அடிக்கடி நம்மைத் தாக்கத் தொடங்கிவிட்டன.

எப்போதோ வந்து வருத்தும் வறட்சி அடிக்கொரு தடவை வந்து மிரட்டும் வேண்டாத விருந்தாளி ஆகிவிட்டது. 

மாதம் மூன்று முறை பெய்த மழை, முறை மாறி ஒர் ஆண்டில் பெய்யும் மழை ஒரே வாரத்தில் பெய்து விட்டு நம்மை வறட்சியில் தள்ளிவிட்டுப் போகிறது.

பயன்படாத இடத்திலும், பயன்படாத நேரத்திலும் பெய்யும் மழை நமக்கும் பயன்படாமலேயே போய்விடுகிறது.

 மண் உயிர் வாழும் பிராணிகள், நுண்ணுயிர்கள் மற்றும் தாவர வகைகளை அழித்து பல்லின பெருக்கத்தை கேள்விக்குறி ஆக்கிவிட்டன, 

ரசாயன உரங்கள்

ரசாயன உரங்கள், இயற்கை வனங்களை சீர்கேடு அடையச் செய்வதாலும் பல்லினப் பெருக்கத்தை, குறைப்பதாலும், பருவக்கால மாற்றத்திற்கு வழி வகுக்கிறது.

மண்புழ உரம் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது.

இது இயற்கை வளங்ளைப் பாதுகாக்க உதவுவதால், பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளை குறைக்க உதவுகிறது.

கையைக் கடிக்காத சாகுபடி செலவு

மண்புழு உரம் இடுவதால் களைகளும் பூச்சி நோய் தாக்குதலும் குறைகிறது.

இது மண்ணின் நீர் பிடிப்புத் தன்மையை அதிகரிப்பதால் நீர்ப்பாசனத்திற்கு ஆகும் செலவு குறைகிறது.

ரசாயன உரத்தை ஓப்பிடும்போது மண் புழு உரம் மிகவும் சிக்கனமானது.

மண்புழு உரம் தயாரிப்பது மிகவும் சுலபம்.

கடினமான தொழில் நுட்பங்கள் எதுவும் இல்லை.

யார் வேண்டுமானாலும் இதனைத் தயாரிக்க முடியும்.

மண்ணின் அங்ககச் சத்தினை, தன் கழிவின் மூலம் அதிகரிக்கிறது.

நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் மண்புழு உரத்தை தொடர்ந்து இடுவதன்மூலம் மண்ணை பொன்னாக  மாற்றிவிட முடியும்.

லட்சக்ணக்கான மண்புழுக்கள் துளையிட்டுச்சென்று மண்ணில் காற்றோட்டத்தை அதிகப்படுத்துகிறது.

இவை மண்ணை உணவாக உட்கொண்டு அவற்றை உரமாக மாற்றி வெளியேற்றுக்கின்றன.

மண்புழு உரத்தை தொடர்ந்து இடும் நிலங்களில் மண்புழு உர உற்பத்தி என்பது தொடர்ந்து நடைபெறுகிறது.

மண்புழு உரம் இடும் வயல்களில் மண்ணின் தன்மை ஆண்டுதோறும் மேம்பாடு அடைகிறது.

மண்புழு உரம் இடும் மண்ணில் நுண்ணுயிர்களின் பெருக்கம், உயர்ந்து கொண்டே போகிறது.

 மண்ணில் லகுவாகப் பெருகும் நுண்ணுயிர்கள் பயிர் ஊட்டச்சத்துக்களை மண்ணில் இருந்து எடுத்து பயிர்களின் வேர்களுக்கு அளிக்கின்றன.

மண்புழு உரம், சாகுபடி செலவுக் குறைத்து பயிர் மகசூலை அதிகரித்து, வருமானத்தையும், லாபத்தையும் அதிகரிக்கிறது.

Image Courtesy: Thanks Google


No comments:

Post a Comment