Select Your Favorite Topic! Enjoy Reading!!

Tuesday, June 21, 2016

திறந்த வெளிகளில் மண்புழு உரத் தயாரிப்பு - 12

Image Courtesy: Thanks Google
  • கொட்டகை இல்லை பரவாயில்லை
  • தொட்டி இல்லை பரவாயில்லை
  • பெட்டி இல்லை பரவாயில்லை
  • நிழல் இல்லை பரவாயில்லை
  • கவலை வேண்டாம், திறந்த வெளிகளில் கூட மண்புழு உரம் தயாரிக்கலாம்.
  • ஆனால் அந்த இடத்தில் இழை தழை கொடுக்கும் மரங்கள் இருக்க வேண்டும்.



மண்புழு உரம் தயாரிப்பைத் தொடங்கிய பின்னால் கூட மரங்களை நட்டு வளர்க்கலாம்.

பொன்னாவாரை, வேம்பு, புங்கன், கிளைரிசிடியா, குமிழ், போன்ற தட்டுப்பாடு இல்லாமல் தழை தரும் மரங்கள் உள்ள இடம் பொருத்தமானது.


தேவைப்படும் பொருட்கள்

  • திறந்த வெளி; நிலப்பரப்பு (6 x 3 அடி)
  • பக்கத்தில் தழை தரும் மரங்கள்
  • பிறகு கூட மரங்களை நடலாம்
  • உதாரணத்திற்கு பொன்னாவாரை, வேம்பு, புங்கன், கிளைரிசிடியா, குமிழ்
  • மணல் 100 முதல் 120 கிலோ
  • தேங்காய் உறி மட்டைகள் எண்ணிக்கையில் 500
  • கரும்பு சோகை, வைக்கோல் அல்லது  உலர்ந்த இலைகள்; - 150 கிலோ
  • மாட்டுச்சாணம் - 250 முதல் 300 கிலோ
  • தண்ணீர் - 20 முதல் 25 குடம்
  • பசுந்தழைகள். 150 கிலோ
  • மண்புழு - 2 கிலோ அல்லது  எண்ணிக்கையில் 2000


தயாரிக்கும் முறை;

திறந்த வெளியில் ஒரு இடத்தை தேர்வு செய்யவும். 3.5 அடி அகலம், 6 அடி நீளத்திற்கு முளைக்குச்சி அடித்து கயிறுகட்டி  மார்க்செய்யவும். முன்குறித்த அளவில் 0.5 அடி ஆழத்திற்கு குழி எடுக்கவும். குழியில் மணலை சீராகப் பரப்பவும். அதன் மீது தேங்காய் உறி மட்டைகளை, முதுகுப் பகுதி கீழே இருக்குமாறு அடுக்குங்கள். பின்னர் 0.5 அடி உயரத்திற்கு வைக்கோல் கரும்பு சோகை அல்லது தாவரக் கழிவை பரப்புங்கள். இதுதான் புழுப்படுக்கை.

புழுப்படுக்ககையின் மீது சாணத்தை கரைத்து சோரத் தெளியுங்கள். அதன் மீது 0.5 அடி கனத்திற்கு மாட்டுச் சாணத்தை பரப்புங்கள். பின்னர் பசுந்தழைகளையும் அதன் மீது தோட்டத்து மண்ணையும் 0.5 அடி உயரத்திற்குப் போட்டு தண்ணீர் தெளிக்கவும். புழுப் படுக்கையில் நான்கு அடி இடைவெளியில் 6 அடி கனமான கம்புகளை செங்குத்தாக நிறுத்தவும். இப்போது ஒரு அடுக்கு புழுப்படுக்கை தயார்.

இதுபோல 5 அடி வரை பல அடுக்குகளைப் போட்டு பழுப்படுக்கையை தயார் செய்ய வேண்டும். பின்னர் புழுப்படுக்கையில் செருகிய கம்புகளை எடுத்து விடவும். கம்புகள் எடுத்த துவாரத்தின் மூலம், புழுப்படுக்கையில் ஏற்படும் சூடும் ஆவியும் வெளியேறும். புழுப்படுக்கையின் மீது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சீராக தண்ணீர் தெளிக்கவும். 75 முதல் 90 நாட்களில் புழுப்படுக்கையில் உள்ள சூடு தணிந்திருக்கும். இந்த சமயத்தில் ஒரு சதுர அடிக்கு 200 கிராம் மண்புழுக்கள் என்ற அளவில் புழுப்படுக்கையில் விடுங்கள். அதன் பிறகு இரண்டாவது வாரத்திலிருந்து மண்புழுபடுக்கை உரமாக மாறுவதைப் பார்க்கலாம். புழுப்படுக்கை முழுவதுமாக உரமாக மாறிய பின் தண்ணீர் தெளிப்பதை நிறுத்துங்கள். பின்னர் 3 அல்லது 4 நாட்களில் மண்புழு உரத்தை அறுவடை செய்யுங்கள். அறுவடை செய்த மண்பழு உரத்தை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.

27. உள்ளுர் மண்புழுக்களை சேகரிப்பது எப்படி?

‘மண்புழுக்கள்’ இருக்க கூடிய நிலப்பரப்பை முதலில் தேர்ந்தெடுங்கள். பின்னர் 500 கிராம் நாட்டு சக்கரை அல்லது வெல்லத்தை 20 லிட்டர் நீரில் கரையுங்கள்.
500 கிராம் புதிய சாணத்தை தனியாகக் கொஞ்சம் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். இரண்டு கரைசல்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்குங்கள். மண்புழுக்கள் இருக்கும் நிலப்பரப்பில் ஒரு மீட்டர் நீளம் ஒரு மீட்டர் அகலம் உள்ள ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள். இந்த நிலப்பரப்பில் சாண-வெல்லக் கரைசலைத் தெளியுங்கள். பின்னர் கரைசல் தெளிந்த மண்பரப்பில் வைக்கோல் அல்லது உலர்ந்த சருகுகளைப் பரப்புங்கள்.

அதன் மீது சாணத்தை பரப்புங்கள். ஒரு பழைய சாக்கு அல்லது கோணியைப் போட்டு அந்த இடத்தை மூடுங்கள். பின்னர் 10 முதல் 15 நாட்களுக்கு அந்தப் பகுதியில் தண்ணீர் தெளியுங்கள். நிலப்பரப்பின் அருகிலும் நிலத்தின் அடிப்பகுதியிலும் இருக்கும் மண்புழுக்கள், வெல்லம்-சாணக் கரைசல் தெளித்த இடத்தில் ஏறி வரும். இந்த மண்புழுக்களை சேகரித்து மண்புழுஉரம் தயாரிக்க பயன்படுத்தலாம்.

Image Courtesy: Thanks Google

Monday, June 20, 2016

உலகச் சந்தையின் கதவுகள் திறந்தே கிடக்கின்றன - 13


Image Courtesy: Thanks Google


மண்புழு உரத்தை டன் ஒன்றுக்கு ரூ.4000 முதல் ரூ.5000 வரை விற்பனை செய்கிறார்கள்.
ரசாயன உரங்களை விற்பனை செய்யும் கடைகளைப் போல மண்புழு உரங்களை விற்பனை செய்யும் கடைகள் ஏதும் இல்லை.
சில தனிப்பட்ட விவசாயிகள் உள்ளுரில் ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்கிறார்கள்.

ஆனால் வரும் காலத்தில் மண்புழு உரத்திற்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.
காய்கள், பழங்கள், பூப்பயிர்கள் மற்றும் அழகுத்தோட்டம் வைத்திருப்போர், நாற்று உற்பத்தி செய்வோரும் மண்புழு உரத்தை விரும்பி வாங்குகிறார்கள்.
ரசாயன உரங்களைப் போல கவர்ச்சிகரமாக பேக்கிஙகு;களில் அடைத்து விற்பனை செய்தால் மண்புழு உரம் நல்ல விலைக்குப் போகும்.
நீங்கள் உற்பத்தி செய்யும் இடத்தில் விற்பனை வாய்ப்பு இருந்தால், கோணிகளில் தேவைக்கு ஏற்ப பேக் செய்யுங்கள்.

நகர்ப்புற நர்சரிகளில் விற்பனை செய்ய அரை கிலோ மற்றும் ஒரு கிலோ பாக்கெட்டுகளில் போடுங்கள்.
நீங்கள் ஏற்றுமதி செய்ய தயார் என்றால் இறக்குமதி செய்வோரும் தயாராக இருப்பார்கள்.
உலகச் சந்தையின் கதவுகள் திறந்தே கிடக்கின்றன.

Image Courtesy: Thanks Google

மர நிழலில் மண்புழு உர உற்பத்தி - 11

Image Courtesy; Thanks Google
  • கொஞ்சம் மர நிழல், கொஞ்சம் மண்புழு, கொஞ்சம் மக்கிய தொழு உரம் இருந்தால் போதும்.
  • சிக்கனமாக மண்புழு உரம் தயார் செய்ய முடியும்.
  • இதில்; தேவைப்படும் மூலதனம், நம்முடைய ஆர்வம் மற்றும் அக்கறை.

தேவைப்படும் பொருட்கள்:

  1. நிழலுடன் கூடிய மரத்தடி
  2. தேங்காய் உரி மட்டைகள் 500 முதல் 600
  3. மக்கிய தொழு உரம் சுமார் 500 கிலோ
  4. தேவையான அளவு தோட்டத்து மண்
  5. சாக்கு - 4 அல்லது 5
  6. மண்புழுக்கள் சுமார் 2 கிலோ
  7. தண்ணீர் 12 முதல் 15 குடம்


செயல் விளக்கம்:

மரத்தடி நிழலுடன் கூடிய ஒரு இடத்தை தெரிந்தெடுங்கள். மரத்தைச் சுற்றிலும் மூன்று அடி அகலத்திற்கு சமப்படுத்துங்கள். சமப்படுத்திய நிலப்பரப்பு வட்ட வடிவமாக இருக்கட்டும். சமப்படுத்திய  3 அடி விட்டத்திற்கும் 0.5 அடி ஆழத்திற்கும் சிறிய பள்ளம் எடுக்கவும். அந்த பள்ளத்தில்  தேங்காய் உறி மட்டைகளை முதுகுப் பக்கம் கீழே இருக்குமாறு சீராக அடுக்குங்கள். பின்னர் தேங்காய் உறி மட்டைகள்; மறையும்வரை 4 அங்குல உயரத்திற்கு தோட்டத்தின் மண்ணை பரப்புங்கள். அந்த மண் நனையுமாறு சீராக தண்ணீர் தெளியுங்கள். அதன்மீது தொழு உரத்தை அரை அடி உயரத்திற்கு பரப்பவும். மீண்டும் தண்ணீர் தெளியுங்கள். இப்படியாக தொழு உரத்தை நான்கு அடுக்கு போடுங்கள். இந்த அடுக்குகள் இரண்டு அடி உயரத்திற்கு மேல் போகாமல் பரப்புங்கள்.

ஓவ்வொரு அடுக்குக்கும் இரண்டு அல்லது மூன்று  குடம் தண்ணீர் தெளியுங்கள். அதற்கு மேல் இரண்டு அங்குல உயரத்திற்கு மாட்டு சாணம். அதன் மீது சீராக தண்ணீர் தெளியுங்கள். பின்னர் தோராயமாக இரண்டு கிலோ அல்லது 1000 மண்புழுக்களை சாணத்தின் மீது விடவும். விரைவாக சாணத்தைக் துளைத்துக் கொண்டு மண்புழுக்கள் உள்ளே சென்று விடும். பின்னர் மண்புழு படுக்கையை ஈரச் சாக்குகள் கொண்டு மூடவும்.

பராமரிப்பு:

இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை பழுப்படுக்கை மீது சீராக 4 முதல் 5 குடம் தண்ணீரை தெளிக்கவும். தண்ணீர் தெளிப்பதை 50 முதல் 60 நாட்கள் வரை செய்யுங்கள். 15 முதல் 20 முறை தண்ணீர் தெளிக்க வேண்டி இருக்கும்.

அறுவடை:

வழக்கம் போல், தண்ணீர் தெளிப்பை நிறுத்தி, 3 (அ) 4 நாள் கழித்து, மேலாக அறுவடை செய்து, நிழலில் உலர்த்தி, சலித்து, கோணிகளில் சேமித்து, தேவையின் போது பயன்படுத்துங்கள்.
Image Courtesy; Thanks Google

தொட்டி முறை மண்புழு உர உற்பத்தி - 10


Image Courtesy: Thanks Google

  • மண்புழு என்றாலே, கட்டுங்கள் தொட்டியை:  போடுங்கள் கொட்டகையை: வாங்குங்கள் வங்கிக் கடனை என்கிறார்கள்.
  • எல்லோரும் பயன்படுத்தும் மண்புழு உர உற்பத்தி முறை இது.
  • இதில் கொஞ்சம் செலவு அதிகம்.
  • சிமெண்ட் தொட்டி கட்டி அதற்கு மேல் கொட்டகை போடும் இந்த முறைக்கு வங்கிகள் கடனை வாரித் தருகின்றன.


வட்டிக்கு கடன் வாங்கி செய்யும் கம்ப சூத்திரமான வேலை இல்லை இது. மண்புழு தயாரிப்பில் நல்ல அனுபவம் பெற்ற பின் இதனை வியாபார ரீதியில் செய்யலாம். எப்போதும் தக்கை மீது கண் வைத்திருக்கும் தூண்டில்காரர்களைப் போல திறமைசாலிகள் இதையும் கண்படும் தொழிலாக மாற்றி விடுகிறார்கள்.

மண்புழு உரத்தை நீங்கள் ஏற்றுமதி செய்ய தயாராக இருந்தால் பலர் இறக்குமதி செய்ய தயாராக இருக்கிறார்கள்.


தேவைப்படும் பொருட்கள்

  • 6 x 3 x 2 அடி அளவுள்ள சிமெண்ட் தொட்டி.
  • தேவையான அளவு கூழாங்கற்கள்.
  • தேவையான அளவு தோட்டத்து மண்.
  • தேவையான அளவு மணல்
  • மாட்டுச் சாணம் சுமார் 500 கிலோ
  • தேவையான அளவு வைக்கோல்
  • தேவையான அளவு இலை தழைகள்.
  • 12 முதல் 15 குடம் தண்ணீர்
  • நிழலான இடம் அல்லது கொட்டகை.


தொட்டியும் கொட்டகையும் அமைத்தல்

6 அடி நீளம் 3 அடி நீளம் மற்றும் 2 அடி அழம் உள்ள சிமெண்ட் தொட்டியை அமையுங்கள். நிழல் உள்ள இடத்தில் தொட்டியை அமையுங்கள. நிழல் இல்லை என்றால் தொட்டிக்கு மேல் கொட்டகை போடுங்கள்.

தொட்டியின் நீளத்தை தேவைக்கு ஏற்ப கூட்டலாம் அல்லது குறைக்கலாம். தொட்டியின் அகலம் மாறாது, ஆழம் மாறாது. அதிகப்படியான ஈரம் வடிய வசதி செய்யுங்கள். இதற்கு தொட்டியின் அடிப்பகுதியில் ஒரு சிறிய துவாரத்தை அமையுங்கள்.

மண்புழு உர உற்பத்தி செயல்முறை

சிமெண்ட் தொட்டியில் 3 அங்குல உயரத்திற்கு கூழாங்கற்களை பரப்புங்கள்.
அதன் மீது கூழாங்கற்கள் மறையும் அளவுக்கு மணலைப் பரப்புங்கள். பின்னர் 3 அங்குல உயரத்திற்கு தோட்டத்து மண்ணை சீராகப் பரப்பவும். அதன் மீது போதுமான அளவு தண்ணீர் தெளிக்கவும். அடுத்து 6 அங்குல உயரத்திற்கு மாட்டு சாணத்தை தொட்டிக்குள் பரப்பவும். பின்னர், வைக்கோல், பசுந்தழைகள் மற்றும் சமையலறைக் கழிவுகளை 6 அங்குல உயரத்திற்கு பரப்பவும். அதன்மீது சாணக்கரைசலை தெளிக்கவும். மீண்டும் இரண்டாம் அடுக்கு சாணம் இட்டு போதுமான அளவு தண்ணீர் தெளித்து வைக்கோல், இலைச் சருகுகள், பசுந்தழை, சமையலறைக் கழிவு, என இட்டு மீண்டும் சாணக்கரைசலை  தொட்டி நிறையும் வரை மூன்றாவது, நான்காவது, அடுக்களை அடுக்கவும். அடுக்குகளின் உயரம் 2 அடிக்கு மேல் போகக் கூடாது.

அடுக்குகள் மீது வைக்கோல் அல்லது சாக்கு போட்டு மூடவும். தொட்டியில் 2 முதல் 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து வரவும். 30 வது நாள் தொட்டியில் சுமார் இரண்டு கிலோ மண்புழுக்களை தொட்டியில் விடவும். தொடர்ந்து 60 நாட்களுக்கு 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரை தெளித்து வந்தால் தொட்டிக் கழிவுகள் அனைத்தும் உரமாகிவிடும்.


வழக்கம்போல் அறுவடை

கழிவுகள் முழுவதுமாக உரமாக மாறி விட்டதா என்று பாருங்கள். மாறி விட்டிருந்தால், 3 அல்லது 4 நாட்களுக்கு தண்ணீர் தெளிப்பதை நிறுத்துங்கள்.
அடுத்த நாள் நாம் மேலாக இருக்கும் மண்புழு உரத்தை சேகரித்துக் கொள்ளலாம்.

மண்புழு குளியல் நீர் சேகரிப்பு

சிமெண்ட் தொட்டியின் அடிப்பகுதியில் ஒரு துவாரம் இட்டு ஒரு சிறிய குழாயைப் பொருத்துங்கள். இது மண்புழுவின் குளியல் நீர் சேகரிக்க உதவும்.
மண்புழுவின் உடலில்பட்டு வடியும் நீர்தான் மண்புழு குளியல் நீர். இது மண்புழு தொட்டியின் அடி துவாரத்த்ன் மூலம் சேகரம் ஆகும். இதனை சேகரித்து திரவ உரமாகப் பயன்படுத்தலாம்.
Image Courtesy: Thanks Google

Sunday, June 19, 2016

வீடுகளில்; மண்புழு உரம் தயாரிக்கும்; முறை - 9

Image Courtesy: Thanks Google


  • வீட்டில் மண்பழு உரம் தயாரிப்பவர்கள் அதிர்ஷ்ட்டசாலிகள்.
  • ரசாயன மருந்துகளின் விஷம் இல்லாத உணவை சாப்பிடுகிறார்கள்
  • இவர்களுக்கு டாக்டர் செலவு மிச்சம்.
  • விஷம் இல்லாத காய்கறிகளை சமைக்கிறார்கள்.
  • காய்கறிகளுக்கு ஆகும் செலவினை  மிச்சம் பிடிக்கிறார்கள்.

இரட்டை நாக்கு வேண்டும்.

உலகின் மொத்த கழிவுகளில் 50-60 சதவிதம் அங்ககக் கழிவுகள்தான்  இதில் அதிகமானவை சமையலறைக் கழிவுகள்தான்.  மிக அதிகமான மீதேன் வாயுவை வெளியேற்றுவது சமையலறைக் கழிவுகள்தான். கழிவுப் பொருட்களை இயற்கையான முறையில் மறு சுழற்சி செய்கின்றன மண்புழுக்கள். நகரவாசிகள் தொட்டிகளிலும் பெட்டிகளிலும் செடிகளை வளர்க்கலாம். அழகுச் செடிகள், காய்கறிச் செடிகள்;, மரங்கள் அனைத்தும்; வளர்க்கலாம். அதற்குத் தேவையான உரங்கள் மற்றும் எருவினை காசு கொடுத்து வாங்குகிறார்கள். வீடுகளில் மற்றும் அப்பார்ட்மெண்ட்களில் கூட மண்புழு உரம் தயார் செய்யலாம். உங்கள் சமையலறைக் கழிவுகளே இதற்கு போதுமானது. மண்புழு உரத்தின் மூலம் உற்பத்தி செய்யும் காய்கறிகளை ருசிக்க இரட்டை நாக்கு வேண்டும்.

தேவைப்படும் பொருட்கள்

  • ஒரு மரப் பெட்டி
  • 40 - 50 மண்புழுக்கள்
  • காய்கறி மற்றும் பழங்களின் கழிவுகள்
  • காப்பி அல்லது தேநீர் தயாரிப்புக் கழிவுகள்
  • இதர சமையலறைக் கழிவுகள்
  • மணல்
  • நைலான் வலை
  • ஒரு பழையதுணி, 
  • நியுஸ் பேப்பர், 
  • உலர்ந்த புற்கள்


பெட்டியில் போடக்கூடாதவை எவை ?

  • உப்பு கலந்த கழிவுகள்
  • ஊறுகாய்
  • எண்ணெய்
  • வினிகர்
  • இறைச்சி
  • கொழுப்பு
  • பால் பொருட்கள்


செய்முறை விளக்கம்

ஒரு சிறிய மரப்பெட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். காலி பெயிண்ட் டப்பாக்களைக்கூட உபயோகிக்கலாம். பெட்டியின் அடிப்பகுதியில் ஒரு நைலான் வலையைப் பொருத்துங்கள். பெட்டியில் இரண்டு சென்டிமீட்டர் அளவுக்கு மணலை பரப்புங்கள். அதன் மீது சமையல் அறைக் கழிவுகளை பரப்புங்கள். காய்கறி மற்றும் பழங்களின் தோல்கள் அனைத்தும் இதில் அடங்கும்;. அதன் மேல் இலை தழைகளைப் பரப்புங்கள். உலர்ந்த இலைச் சருகுகளையும் பரப்புங்கள். சிறுசிறு துண்டுகளாக கிழிக்கப்பட்ட நியூஸ் பேப்பர்களையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பின்னர் அளவாக தண்ணீர் தெளியுங்கள். தண்ணீரை அதிகம் ஊற்றக் கூடாது. இப்படி தினமும் சமையல் அறைக் கழிவுகளை சேகரித்து அந்த மரப் பெட்டியில் போட்டு தண்ணீர் தெளியுங்கள். மரப்பெட்டி நிரம்பிய பின் அதனுள் 40 முதல் 50 மண்புழுக்களை புழுப்படுக்கையில் விடுங்கள். தினமும் தண்ணீர் தெளியுங்கள்.

நான்காவது வாரம் பெட்டிக் கழிவுகள் மண்புழு உரமாக மாறுவதைப் பார்க்கலாம்.

கழிவுகள் ழுழுவதும் உரமாக மாறிய பின்னால் உரத்தினை மட்டும் பெட்டியிலிருந்து பிரித்து எடுக்கலாம். பெட்டியின் அடிப் பகுதியில் இருக்கும் மண்புழுக்கள் இரண்டாம் தயாரிப்புக்கு உதவும.; பின்னர் செடிகளுக்குப் போடலாம்.

கவனிக்க வேண்டியவை

பெட்டியை, எப்போதும் மூடி வையுங்கள். கழிவுப்பொருட்களை எப்போதும் ஈரமாக வையுங்கள். அதிக குளிரும் ஆகாது, அதிக வெப்பமும் ஆகாது.
                                                                      
Image Courtesy: Thanks Google

Friday, June 17, 2016

மண்புழு உர உற்பத்தியில் கவனிக்க வேண்டியவை - 8

Image Courtesy: Thanks Google
சாணம் சேகரிப்பது எப்படி ?

10 முதல் 15 நாள் சாணத்தை பயன்படுத்தலாம். உலர்ந்து போன சாணத்தை உபயோகிக்கக் கூடாது. தேவையான சாணத்தை நிழலான இடத்தில் குவியலாக சேமிக்கலாம். அதில் கல்,மண் தூசு துப்பட்டை சேரக் கூடாது. இரண்டு நாளுக்கு ஓரு முறை சாணத்தை மண்வெட்டியால்  கிளறி விடவும். இதிலிருந்து மீதேன் வாயு வெளியேறி சூடு குறையும். இப்படி ஆறிய சாணத்தை பயன்படுத்துங்கள். சாணத்திற்கு பதிலாக மக்கிய பயிர்க்கழிவு, மக்கிய கோழி உரம், பட்டுப்பூச்சி வளர்ப்புமனைக் கழிவு, சமையல் கழிவு ஆகியவற்றைக் கூட பயன்படுத்தலாம்.


புழுப்படுக்கையில்  தண்ணீர் தெளிக்கும் முறை

ஈரம், குளிர்ச்சி, இருட்டு மூன்றும் மண்புழுவிற்கு  அவசியமானவை. மண்புழுக்கள் ஈரம் இல்லாத இடத்தை விட்டு வெளியேறிவிடும். மண்புழுக்கள் படுக்கையில் தொடர்ச்சியாக ஈரம் இருக்க வேண்டும். ஈரம் அதிகமும் அதற்கு ஆகாது. 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளிக்கலாம்.

தேங்காய் உறிமட்டை மற்றும் மணல் போடுவது ஏன் ?;

மண்புழு படுக்கையை விட்டு புழுக்கள் தப்பிக்காமல் தடுக்கத்தான் இந்த ஏற்பாடு. அடி மண்ணுக்கும் புழுப்படுக்கைக்கும் போடப்பட்ட வெலிதான் தென்னை உறிமட்டைகளும் மணலும். மேலும் கூடுதலாக ஊற்றும் தண்ணீரை தேங்காய் உறிமட்டைகளும், மணலும் வடித்;து விடும்.

மண்புழு படுக்கையை பராமரிக்கும் வழிமுறை

புழுப்படுக்கையை வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்கவும.; தோட்டத்தில் கிடைக்கும் கழி கம்புகள், மற்றும் ஒலைகளைப் பயன்படுத்தி கொட்டகை போடலாம்.  கோழி, காகம் போன்றவற்றிடமிருந்து புழுக்களைப் பாதுகாக்க வேண்டும். இதற்கு தரை மட்டத்திலிருந்து 4 அல்லது 5 அடி உயரத்திற்கு கம்பி வலையை கொட்டகையைச் சுற்றி பொருத்தலாம். புழுப்படுக்கையைச் சுற்றிலும் மஞ்சள் அல்லது மிளகாய்த்துள் கோலமிடுவது போல போடலாம். இது எறும்பு மற்றும் கரையான்களிடமிருந்து மண்புழுக்களை பாதுகாக்கும். அதன் பின்னர் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை 5 முதல் 6 குடம் தண்ணீர் தெளிக்க வேண்டும். இதனால் தொடர்ந்து புழுப் படுக்கையை ஈரமாக வைத்துக் கொள்ளலாம். 40 முதல் 60 நாட்களில் புழுப்படுக்கை முழுமையாக மண்புழு உரமாக மாறிவிடும்.

அறுவடைக்கு முன் தண்ணீர் தெளிப்பை நிறுத்துங்கள்

புழுப்படுக்கை முழுவதும் உரமாக மாறிவிட்டதா ? பாருங்கள். பினனர்; 2 முதல் 3 நாட்களுக்கு தண்ணீர் தெளிப்பதை நிறுத்துங்கள். இப்போது புழுப்படுக்கையில் புழுக்கள் அடிப்பகுதிக்கு சென்றுவிடும். பின்னர் மேலாக இருக்கும் மண்புழு உரத்தை அறுவடை செய்யுங்கள். அறுவடை செய்ததை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நிழலில்; உலர்த்துங்கள்.  பின்னர் சல்லடையில் சலித்து கோணிகளில் சேமியுங்கள். சேமித்த உரத்தை தேவைக்கு ஏற்ப பயிர்களுக்குப் பயன்படுத்துங்கள்.


மண்புழு உரத்தை தொடர்ந்து உற்பத்தி செய்யும் முறை

செல்போன் ரீசார்ஜ் செய்வது போல புழுப் படுக்கையில் பசும் சாணத்தால் ரீசார்ஜ் செய்தால் போதும். மீண்டும் மீண்டும் மண்பழு உரம் அறுவடை செய்யலாம்.

அந்த புழுப்படுக்கையில் மீண்டும் ஒரு 500 கிலோ சாணத்தை முன் போல 5 அடுக்குகளாக ரீசார்ஜ் செய்யவும.; அறுவடை செய்யும் போது புழுக்கள் அத்தனையும் அடிப் பகுதியில் தங்கி இருக்கும். இப்போது புதிய புழுக்களைப் போட வேண்டாம். முன் சொன்னது போல 2 முதல் 3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றி பராமரியுங்கள். இப்போது 60 நாட்கள் காத்திருக்க வேண்டாம். 30 நாட்களிலேயே கூட எடுக்கலாம். காரணம் இப்போது புழுக்கள் அதிகம் இருக்கும்.

கூடுதலாக இருக்கும் மண்புழுக்களை எடுத்து தனியாக இன்னொரு பழுப்படுக்கையைக் கூட தயார் செய்யலாம். ரசாயன உரங்கள் மாதிரி ஒவ்வொரு மூட்டைக்கும் காசுகொட்டி அழ வேண்டாம்.
Image Courtesy: Thanks Google

மண்புழு உரம் தயாரிப்பு (கேள்வி பதில்) - 7


Image Courtesy: Thanks Google
கேள்வி: 1. மண்பழு உரம் தயாரிக்கவிரும்பும் விவசாயிகள் முதலில் என்ன செய்ய வேண்டும் ? 
  • மண்புழு உரம் தயாரிப்பில் பல முறைகள் உள்ளன. 
  • இதில் எந்த முறையில் செய்தால் செலவு குறையும் என்று பாருங்கள்.
  • கூடுமானவரை நம் கைவசம் உள்ள பொருட்களை பயன்படுத்துங்கள் 
  • பக்கத்து கிராமங்களில் யாராவது மண்புழு உரம் தயார் செய்கிறார்களா? என்று பாருங்கள்.
  • அவர்களுடைய அனுபவங்களை கேட்டுக் கொள்ள வேண்டும்.
  • குவியல் முறை, தொட்டி முறை, பெட்டி முறை குழி முறை, மரத்தடியில் தயாரிக்கும் முறை, திறந்தவெளியில் தயாரிக்கும் முறை என்று அனைத்து முறைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.


2. மண்புழு தயாரிப்பில் என்னென்ன மண்புழு வகைகளை பயன்படுத்தலாம் ? 

உலகம் முழுவதும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளவை 6000 வகை. இவை 20 குடும்பங்களைச் சேர்ந்தவை. இந்தியாவில் இருப்பவை மட்டும் 500 வகை. தமிழ்நாட்டில் அதிகம்  உர உற்பத்திக்காக வளர்க்கப்படுபவை சுமார்  மூன்று வகை. இந்திய மண்புழு, ஐரோப்பிய மண்புழு, மற்றும் ஆஃப்ரிக்க மண்புழு

இந்திய மண்புழு 
(PERIONYX EXCAVATUS)

இது நம்ம ஊர் மண்புழு. இமயமலைப்பகுதி இதன் தாயகம். வட அமெரிக்காவில்இது ரொம்ப பிரபலம்.  வியாபார ரீதியாக வகை இது . வெப்பமண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலம் பகுதிக்கு ஏற்றது. புழுக்கள் மெல்லியதாக இருக்கும். செம்புழுக்களைவிட வேகமாக ஊர்ந்து செல்லும். ஈரம் குறைவாகவும் வெப்பம் அதிகமாகவும் இருக்கும் இடங்களில் கூடுதலாக உரத்தை உற்பத்தி செய்யும். சமையலறைக் கழிவு, பண்ணைக்கழிவு, கழிவு நீர் கால்வாய் ஆகியவற்றில் வசிக்கும். இதன் அறிவியல் பெயர் பெரியோனிக்ஸ் எஸ்கவேட்டஸ்

2. ஐரொப்பிய செம்புழு 
(EISENIA  FETIDA)

அழுகிக் கொண்டிருக்கும் தாவரக் கழிவு, கம்போஸ்ட் மற்றும் எருக்களில் வசிக்கும்.பரவலாக உர உற்பத்திக்கு ஏற்றவை. ஐரோப்பா இதன் தாய் மண். பல நாடுகளில் இவை அறிமுகம் ஆகி உள்ளன. புழுக்களை அழுத்திப் பிடித்தால் அவற்றின் உடலில் ஒருவித மோசமான வாடை வீசும் திரவம் சுரக்கும். மண்கண்டத்தின் மேல் பகுதிலேயே வசிக்கும். அதற்கு பிடிக்காது பகல் வெளிச்சம். பிடித்தமானது இருட்டு. தினசரி சாப்பிடுவது, தன் உடல் எடையைப் போல் இரண்டு மடங்கு. எண்ணிக்கையில பெருக்கம் அடைவது, 90 நாட்களில் இரு மடங்கு. ஐசினியா ஃபெட்டிடா, இதன் அறிவியல் பெயர்

3. ஆப்ரிக்க மண்புழு 
(EUDRILUS  EUGENIAE)

மேல் பகுதி மண்கண்டத்தில் வசிக்கும் மண்புழுக்களில் ஒன்று. மேல் மட்ட மண்புழுக்கள்தான் அதிக மண்புழு உரத்தை உற்பத்தி செய்யும்.மிக வேகமாக இனப்பெருக்கம் ஆகும்.8 முதல் 10 வாரங்களில்  முழு வளர்ச்சி அடையும்.
வளர்ந்த புழு ஒன்று 2.5 கிராம் எடை இருக்கும் உடலில் ஊதா மற்றும் சாம்பல் நிறம் பூசியது போல் இருக்கும். புழுவின் பின்புற உடல் சீராக சரிந்து சென்று கூர்மையாக ழுடிவடையும். இதன் தாய்வீடு மேற்கு ஆப்ரிக்காவின் வெப்பமான பகுதி. வெப்ப மண்டலப் பகுதிகளில் பரவலாக மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் வகை. யூட்ரில்லஸ் யூஜினியா என்பது இதன் அறிவியல் பெயர்


கேள்வி 3. மண்புழு உரம் தயாரிப்பில் சிக்கனமான செலவு குறைந்த முறை எது ?

குவியல் முறைதான் சிக்கனமானது. எவ்வுளவு சிறிய இடத்திலும் இதனை தயார் செய்ய முடியும். குவியல் முறையில் சிமெண்ட் தொட்டி கட்ட வேண்டாம். காசு செலவில்லா சிக்கன முறை இது. சிறிய வீட்டுத் தோட்டம் கூட இதற்குப் போதும்.


கேள்வி 4. குவியல் முறையில் மண்புழு உரம் தயார் செய்ய என்னென்ன பொருட்கள் தேவை ?

1. பழுப் படுக்கை அமைப்பதற்கு தேவைப்படும் நிழலான ஒரு இடம்
2. சுமார் 1000 அல்லது 2 கிலோ மண்புழுக்கள்
3. சுமார் 500 கிலோ ஆறிய பசும் சாணம்
4. 10 முதல் 12 லிட்டர் குளோரின் கலக்கப்படாத தண்ணீர்
5. சுமார் 500 தேங்காய் உறிமட்டைகள்
6. 100 கிராம் மிளகாய்த்  தூள் அல்லது மஞ்சள் தூள்
7. குளோரின் கரைக்காத தண்ணீர் 10 முதல் 15 குடம்

கேள்வி 5. குவியல் முறையில் மண்புழு உரம் தயார் செய்யும் முறையை விளக்கமாக சொல்லுங்கள்.

நிழல் உள்ள இடத்தை தேர்ந்தெடுங்கள். அது கொட்டகை அல்லது மரத்தடியாக இருக்கலாம். 15 அடி நீளம் மற்றும் 3.5 அடி அகலத்திற்கு நிலப்பரப்பை அளந்து முளை அடித்துக் கொள்ளுங்கள். இதுதான் புழுப்படுக்கை. இதன் அகலம் 3.5 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. நீளம் வேறு படலாம். புழுப் படுக்கையில் 0.5 அடி அழத்திற்கு மண்வெட்டியால் வெட்டி மண்ணை எடுத்துவிடவும். அப்படி எடுத்த பள்ளத்தில் அதில் சீராக மணலை நிரப்பவும். பரப்பிய மணலின் மீது தேங்காய்  உறி மட்டைகளை  முதுகுப்புறம் மணலில் படுமாறு அடுக்கவும். ஏற்கனவே சேகரித்து வைத்திருக்கும் பசும் சாணம் 100 கிலோவை அதன் மீது சீராகப் பரப்பவும். அதன்மீது 4 முதல் 5 குடம் தண்ணீரை சீராக தெளிக்கவும். மீண்டும் 100 கிலோ சாணத்தை புழுப் படுக்கையின் மீது சீராகப் பரப்பவும். அதன்மீது 2 முதல் 3 குடம் தண்ணீரை சீராகத்  தெளிக்கவும். இப்படி 5 அடுக்கு சாணத்தை போட்டு 5 முறை சீராகத் தண்ணீர் தெளிக்கவும். இப்போது புழுப்படுக்கையின் உயரம் 2 அடிக்கு மெல் இருக்கக் கூடாது.

பின்னர் கைவசம் உள்ள மண்புழுக்களை புழுப்படுக்கையில் பரவலாக விட வேண்டும். விடப்பட்ட மண்புழுக்கள் சாணப்படுக்கையை துளைத்துக் கொண்டு உட்புறம் சென்று விடும். பின்னர் புழுப் படுக்கையைச் சுற்றிலும் ஒரு அடி இடைவெளிவிட்டு மஞ்சள் தூள் அல்லது மிளகாய் தூளை கோலம் பேடுவது போல போடவும். இதனால் எறும்பு மற்றும் கறையான்கள் புழுப்படுக்கையில் ஏறாமல் தடுக்கலாம்.

கேள்வி 6. மண்புழு உரத்தை எப்போது அறுவடை செய்யலாம் ?

60 நாள் முதல் அறுவடை செய்யலாம். அறுவடைக்கு மூன்று நாட்களுக்கு முன் குவியலில் தண்ணீர் தெளிப்பதை நிறுத்த வேண்டும். புழுக்கள் குவியலின் கீழ்பகுதிக்கு சென்றுவிடும். மேலாக சேர்ந்திருக்கும் மண்புழு உரத்தை அறுவடை செய்யலாம். இதே புழுபடுக்கையை பயன்படுத்தி மீண்டும் மீண்டும் அறுவடை செய்யலாம்.

கேள்வி 7. மண்புழு உரத்தை பயிர்களுக்கு எவ்வளவு இடலாம் ?

ஏக்கருக்கு 2000 கிலோ. பழ மரங்களுக்கு – 10 முதல் 15 கிலோ. இளம் கன்றுகளுக்கு – 1 முதல் 2 கிலோ. தொடர்ந்து இடுவது மிகவும் நல்லது.தொட்டிச்செடிகளுக்கு – 100 கிராம்; முதல் 250 கிராம் வரை போடலாம்

கேள்வி 8. இதனை விற்பனை செய்ய முடியுமா ?

செய்ய வேண்டும். செய்ய முடியும். முடியாதது எதுவும் இல்லை. பாக்கட் செய்து நகரங்களில் விற்கலாம்.ஏற்றுமதிக்குக்கூட வாய்ப்பு உள்ளது.
VERMI COMPOST
Image Courtesy: Thanks Google